ஆப்நகரம்

ஜெயலலிதா வானில் இருந்து எங்களை பார்த்து வருகிறார்: பன்னீர் செல்வம்!!

''ஜெயலலிதாவை காப்பாற்ற முடியாத பாவிகள் இன்று தனி இயக்கமாக செயல்பட்டு வருகின்றனர். மனசாட்சி படி பணியாற்றி வருகிறோம். ஜெயலலிதா வானில் இருந்து எங்களை பார்த்து வருகிறார்'' என்று திருப்பரங்குன்றத்தில் அதிமுக சட்டமன்ற வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து துணை முதல்வர் பன்னீர் செல்வம் பேசினார்.

Samayam Tamil 2 May 2019, 2:33 pm
''ஜெயலலிதாவை காப்பாற்ற முடியாத பாவிகள் இன்று தனி இயக்கமாக செயல்பட்டு வருகின்றனர். அதிமுகவை எந்தக் கொம்பன் வந்தாலும் அசைக்க முடியாது. நாங்கள் எங்கள் பணியை மனசாட்சி படி செய்து வருகிறோம். ஜெயலலிதா வானில் இருந்து எங்களை பார்த்து வருகிறார்'' என்று திருப்பரங்குன்றத்தில் அதிமுக சட்டமன்ற வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து துணை முதல்வர் பன்னீர் செல்வம் பேசினார்.
Samayam Tamil திருப்பரங்குன்றத்தில் பன்னீர் செல்வம்
திருப்பரங்குன்றத்தில் பன்னீர் செல்வம்


மதுரை சிலைமான் பகுதியில் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது, "திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் முனியாண்டியை எம்எல்ஏவாக தேர்வு செய்தால் உங்களது அடிப்படை தேவைகளை உடனடியாக செய்து கொடுப்பார். ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் மக்கள் நல திட்டங்கள், தொலை நோக்கு திட்டங்கள் ஆகும். மழை, வெள்ள காலங்களில் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தவர் ஜெயலலிதா.

2023 க்குள் தமிழகத்தில் உள்ள குடிசைகள் காங்கிரீட் வீடுகளாக கட்டிக் கொடுப்போம். ஜெயலலிதாவின் அரசு 8 கிராம் தாலிக்கு தங்கம் வழங்கி வருகிறது. அவர் நம்முடன் இல்லாவிட்டாலும் அவரது திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது, பொங்கலுக்காக 1000 ரூபாயுடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது சாதி, மத சண்டைகள்எதுவும் இல்லை.

தேர்தல் முடிந்த உடன் நீதிமன்ற தடையை நீக்கி 2 ஆயிரம் வழங்கப்படும். 33 வருடம் ஜெயலலிதா உடன் இருந்து ஜெயலலிதாவை காப்பாற்ற முடியாத பாவிகள் தனி இயக்கமாக செயல்படுகின்றனர். அதிமுகவை எந்தவொரு கொம்பனாலும் அசைக்க முடியாது.

ஜெயலலிதா வானில் இருந்து எங்களது செயல்பாடுகளை கவனித்து வருகிறார். அந்த பயத்துடன்தான் நாங்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறோம், திமுக ஆட்சியில் மக்கள் துன்பப்பட்டு வந்தனர். எங்களது பணியை நாங்கள் மனசாட்சிபடி செய்து வருகிறோம். நடந்து முடிந்த 18 சட்டமன்ற தொகுதிகளிலும், நடைபெறும் 4 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுகவே வெற்றி பெறும்" என்றார்.

இந்தப் பிரச்சாரத்தின்போது, 2 பெண் குழந்தைகளுக்கு ஜெயஸ்ரீ, ஜெயராணி என்று பன்னீர் செல்வம் eன்று பெயர் சூட்டினார்.

அடுத்த செய்தி