ஆப்நகரம்

6 அடி நிலம் தராத எடப்பாடி அரசுக்கா வாக்களிக்கப் போறீங்க? ஸ்டாலின் காரசார பிரச்சாரம்!

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் பிரச்சாரம் மேற்கொண்ட மு.க.ஸ்டாலின், எடப்பாடி அரசுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.

Samayam Tamil 16 May 2019, 11:10 am
திருப்பரங்குன்றம் தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து, வீரகனூர், மேல அனுப்பானடி, வில்லாபுரம் மீனாட்சி நகரில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அதிமுகவில் இருந்து 3 எம்.எல்.ஏக்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஆப்பு வைத்தேன்.

கலைஞர் இறந்ததற்கு 6 அடி நிலம் கேட்டு கடிதம் அனுப்பினேன். எடப்பாடியை நேரடியாக சந்தித்து அண்ணா சமாதி அருகில் கலைஞருக்கு இடம் கேட்டும் மறுத்து விட்டனர். பின் நீதிமன்றத்தை நாடி அனுமதி கிடைத்தது.

தமிழர்களுக்கு மட்டும் கலைஞர் தலைவர் இல்லை. உலகத்தில் வாழும் தமிழர்களுக்கு எல்லாம் தலைவர். 6 அடி நிலம் தர மறுத்த எடப்பாடி அரசுக்கா வாக்களிக்கப் போகிறீர்கள்.

திமுக தேர்தல் அறிக்கையில், 100 நாள் வேலைத் திட்டத்தை 120 நாட்களாக வேலை பார்த்தவர்களுக்கு அலைக் களிக்காமல் பணம் வழங்கப்படும். கேபிள் கட்டணம் பழைய நிலைமைக்கு கொண்டு வரப்படும்.

விவசாய கடன் தள்ளுபடி, வங்கியில் அடகு வைத்த ஏழை மக்களின் கடன் தள்ளுபடி என எண்ணற்ற சலுகைகள் இருக்கின்றன. வரும் 19ஆம் தேதி, நமது வேட்பாளர் டாக்டர் சரவணனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

அடுத்த செய்தி