ஆப்நகரம்

அடுத்த 50 ஆண்டுகால தமிழக ஆட்சி ஸ்டாலின் கையில் தான் - துரைமுருகன் நம்பிக்கை!

விரைவில் ஆட்சி மாற்றம் நடைபெறும் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 28 Apr 2019, 10:37 pm
கோவை மாவட்டம் சூலூர் தொகுதியில் திமுக சார்பில் பொங்கலூர் பழனிசாமி போட்டியிடுகிறார். அவரை அறிமுகப்படுத்தும் கூட்டம் இன்று இரவு 7 மணியளவில் சூலூரில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன், மக்களவை தேர்தலோடு, இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன.
Samayam Tamil DURAIMURUGAN


தற்போது நடக்கும் ஆட்சி நிலைக்க வேண்டுமென்றால், குறைந்தது 5 அல்லது 6 தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டும். இந்த சூழலில் ஆட்சிக்கு எதிரானவர்களை தகுதி நீக்கம் செய்யும் முயற்சியில் ஆளுங்கட்சி ஈடுபட்டுள்ளது.

ஏற்கனவே நடைபெற்ற 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஒன்று அல்லது இரண்டு தொகுதிகளில் தான் அதிமுக ஜெயிக்கும் என்று அவர்களே கணித்துவிட்டார்கள். அதனால் தான் எஞ்சிய 4 தொகுதிகளில் வெற்றி பெற முயற்சித்து வருகின்றனர்.

அதற்கான பணத்தை வாரி இறைக்கப் போகின்றனர். கோடிக்கணக்கில் பணத்தை இறக்கி, ஒரு ஓட்டிற்கு ரூ.10,000 வரை கொடுக்க திட்டமிட்டுள்ளனர். மக்கள் மீதான நம்பிக்கை குறைந்துபோய் விட்டது. ஆகையால் பணத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.

சூலூர் தொகுதி மக்கள் நன்கு படித்தவர்கள். நாடு நடப்பு தெரிந்தவர்கள். பணத்துக்கு விலை போக மாட்டார்கள். அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளில் திமுகவிற்கு வெற்றி நிச்சயம். எனவே சூலூரை ஜெயித்து கொடுங்கள்.

25 நாட்களில் இந்த ஆட்சியை மாற்றிக் காட்டுகிறேன். கருணாநிதியிடம் ராஜ தந்திர கற்றுள்ளேன். அடுத்த 50 ஆண்டுகால தமிழக ஆட்சி ஸ்டாலினிடம் தான் என்று துரைமுருகன் தெரிவித்தார்.

அடுத்த செய்தி