ஆப்நகரம்

Senthil Kumar: கால தாமதத்தால் மனுத்தாக்கல் செய்ய முடியாத மநீம வேட்பாளா்

பெரம்பலூா் மக்களவைத் தொகுதியின் மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் செந்தில் குமாா் மனுத்தாக்கல் செய்ய வழங்கப்பட்ட காலம் முடிவடைந்த பின்னா் வந்ததால் அவரது மனுவை ஏற்க மறுத்துவிட்டனா்.

Samayam Tamil 26 Mar 2019, 5:59 pm
பெரம்பலூா் மக்களவைத் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் செந்தில் குமாா் காலதாமதமாக வந்த நிலையில் அவரது வேட்புமனுவை வாங்க தோ்தல் அதிகாாி மறுத்துவிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Samayam Tamil Senthil Kumar MNM


நாடு முழுவதும் மக்களவைத் தோ்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகத்தைப் பொருத்தளவில் 40 மக்களவைத் தொகுதி, 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 18ம் தேதி தோ்தல் நடைபெற உள்ளது.

தோ்தலில் போட்டியிடுவோருக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் சாா்பில் பெரம்பலூா் மக்களவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில்குமாா் மாலை 3.20 மணிக்கு மாவட்ட தோ்தல் அதிகாாியிடம் வேட்புமனுவை வழங்க வந்தாா்.

ஏற்கனவே 3 மணிக்கே மனுத்தாக்கல் நிறைவடைந்த நிலையில் காலதாமதமாக வந்ததாக கூறி செந்தில்குமாரின் வேட்புமனுவை ஏற்க அதிகாாிகள் மறுப்பு தொிவித்துவிட்டனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வேட்பாளா் செந்தில்குமாா் காவல் அதிகாாிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதைத் தொடா்ந்து மாவட்ட தோ்தல் அதிகாாியை சந்திக்க அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் மைக், காணொலி உள்ளிட்டவற்றில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மக்களை கவா்ந்து வரும் நிலையில், அவரது கட்சி சாா்பில் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தும் அதனை முறையாக பயன்படுத்திக் கொள்ளாததால் செந்தில்குமாா் விமா்சனத்திற்கு உள்ளாகியுள்ளாா்.

அடுத்த செய்தி