ஆப்நகரம்

திருப்பரங்குன்றம் தொகுதி வேட்டை ஆரம்பம் - தேர்தல் அலுவலர் நாகராஜன்

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் பணபட்டுவாடு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - மாவட்ட தேர்தல் அலுவலர் நாகராஜன் பேட்டி

Samayam Tamil 28 Apr 2019, 2:03 pm
திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் பணபட்டுவாடு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - மாவட்ட தேர்தல் அலுவலர் நாகராஜன் பேட்டி
Samayam Tamil nagarajan


வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனுமதியின்றி அதிகாரிகள் நுழைந்து ஆவணங்களை எடுத்துசென்ற விவகாரத்தில் மதுரை மாவட்ட தேர்தல் அலுவலராக இருந்த நடராஜன் பணியிடமாற்றம் செய்யப்பட்டநிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியாக ச.நாகராஜன் இன்று பொறுப்பு எற்று கொண்டார்.

மதுரை மாவட்ட ஆட்சியராக பொறுப்பு எற்று கொண்ட நாகராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது : இந்திய தேர்தல் ஆணைய பரிந்துரைபடி நான் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளேன், வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கூடுதல் பாதுகாப்பு அமைப்பது குறித்து ஆலோசனைக்கு முடிவெடுக்கப்படும், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணவிநியோகம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் நாளையுடன் வேட்புமனுதாக்கல் முடிவடையும் நிலையில் நாளை தேர்தல் பார்வையாளர்கள் வருகை தருகின்றனர் , திருப்பரங்குன்றம் தொகுதியில் 9பறக்கும்படையினர் உள்ள நிலையில் கூடுதலாக பறக்கும்படையினர் நியமிக்க உள்ளோம், நாளை முதல் தேர்தல் பார்வையாளர்கள் வருகை தருகின்றனர்.

அடுத்த செய்தி