ஆப்நகரம்

DMK MLAS: சட்டமன்றத்தில் பலம்பெறும் திமுக; இடைத்தேர்தலில் வென்ற 13 பேர் பதவியேற்றனர்!

இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்.எல்.ஏக்கள் 13 பேர், மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.

Samayam Tamil 28 May 2019, 1:00 pm
தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து மே 19ஆம் தேதி எஞ்சிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது.
Samayam Tamil DMK MLAs


இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 23ஆம் தேதி நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 37 தொகுதிகளை வென்று அபார வெற்றி பெற்றது. அதிமுக ஒரு தொகுதியில் வென்றது.

இதேபோல் இடைத்தேர்தலில் 22 தொகுதிகளில் 13ல் திமுக வென்றது. மீதமுள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. இதனால் ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை.

இந்நிலையில் சட்டமன்றத்தில் திமுக கூட்டணியின் பலம் தற்போது உயர்ந்துள்ளது. இந்த சூழலில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக எம்.எல்.ஏக்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், சபாநாயகர் தனபால் அறையில் பதவியேற்றனர்.

அதிமுக எம்.எல்.ஏக்கள் 9 பேர் எப்போது பதவியேற்பார்கள் என்ற தகவல்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

அடுத்த செய்தி