ஆப்நகரம்

Godse Controversy: என்னை கைது செய்தால் பதற்றம் அதிகரிக்கும்: கமல் ஹாசன்!

தான் கூறிய கருத்தில் எந்தவித தவறும் இல்லை என்று நடிகர் கமல் ஹாசன் கூறியுள்ளார்.

Samayam Tamil 17 May 2019, 9:42 am
சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், கோட்சே ஒரு இந்து தீவிரவாதி என்று நான் கூறிய கருத்தில் தவறில்லை.
Samayam Tamil Kamal Haasan


இதே கருத்தை நான் ஏற்கனவே மெரினாவில் பேசியிருக்கிறேன். அங்கு பேசிய போது பெரிதுபடுத்தாததை, அரவக்குறிச்சியில் பேசிய போது பெரிதுபடுத்தி விட்டார்கள். இது உருவான சர்ச்சை அல்ல.

உருவாக்கப்பட்ட சர்ச்சை. வாலையும், தலையும் கத்தரித்து போட்டால் யாரும், யாரையும் குற்றம் சொல்ல முடியும். பிரதமர் மோடிக்கு சரித்திரம் பதில் சொல்லும். நான் பதில் சொல்ல வேண்டியதில்லை.

இந்துக்கள் யார்? ஆர்.எஸ்.எஸ் யார்? என்பதை பிரித்து பார்க்க வேண்டும். கைது செய்யப்படுவதற்கு பயப்படவில்லை; கைதானால் பதற்றம் அதிகரிக்கும்.

சூலூரில் நான் பிரச்சாரம் மேற்கொள்ள தடை விதித்திருப்பதில் அரசியல் இருக்கிறது. சூலூரில் பதற்றம் இருந்தால் ஏன் தேர்தலை தள்ளி வைக்கக்கூடாது என்று கமல் ஹாசன் கூறினார்.

அடுத்த செய்தி