ஆப்நகரம்

சிக்கலில் பெரம்பூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை

வடசென்னைக்கு செல்ல வேண்டிய வாக்குப்பதிவு இயந்திரம் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்திற்கு மாறி கொண்டுவரப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 23 May 2019, 3:01 pm
சென்னையில் உள்ள ராணி மேரி கல்லூரியில் வடசென்னை மக்களவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையும், பெரம்பூர் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்று வருகிறது.
Samayam Tamil பெரம்பூர் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் தொடரும் சிக்கல்
பெரம்பூர் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் தொடரும் சிக்கல்


ஆனால் இரண்டுக்குமான வாக்கு எண்ணிக்கையும் தனித்தனியே நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெரம்பூர் தொகுதிக்கு 4 சுற்றுகளுக்கான வாக்கு எண்ணிக்கை முடிந்தது.

அப்போது அதற்கான வாக்கு எண்ணிக்கை இயந்திரத்தை திறந்த போது, அது வட சென்னையில் வாக்குப்பதிவின் போது பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரமாக இருந்தது.

இதை பார்த்து வேட்பாளர்களும், முகவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். வடசென்னை வாக்கு எண்ணும் மையத்திற்கு போக வேண்டிய இந்த இயந்திரம், பெரம்புர் வாக்கு மையத்திற்குள் இருப்பது அவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது.

அப்போது அங்கியிருந்த முகவர்களும், வேட்பாளர்களும் வாக்கு இயந்திரம் மாறி வந்திருப்பதாக தெரிவித்தனர். அதனால் வாக்கு எண்ணிக்கை தொடரக்கூடாது என்று குரெலழுப்பத் தொடங்கினர்.

அங்கு வந்த தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல நேரம் வாக்கு எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் முகவர்களிடம் பேச்சு நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி