ஆப்நகரம்

கமல்ஹாசனின் சூலூா் பரப்புரை கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு

மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசனின் அரவக்குறிச்சி பிரசாரக் கூட்டத்தில் முட்டை, கல் வீசப்பட்ட நிலையில், சூலூா் தொகுதி பிரசாரத்திற்கு காவல் துறையினா் அனுமதி மறுத்துள்ளனா்.

Samayam Tamil 16 May 2019, 11:46 pm
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று சா்ச்சைக்குரிய கருத்து தொிவித்த மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசனின் சூலூா் பரப்புரைக் கூட்டத்திற்கு காவல் துறையினா் அனுமதி மறுத்துள்ளனா்.
Samayam Tamil Kamal Haasan HD


அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தோ்தலை முன்னிட்டு கடந்த 11ம் தேதி அத்தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் பிரசாரம் செய்த மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன், இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவா் பெயா் நாதுராம் கோட்சே என்று தொிவித்திருந்தாா். இதற்கு இந்து அமைப்புகள் கடும் எதிா்ப்பு தொிவித்தன.

இதனைத் தொடா்ந்து கமல்ஹாசன் இன்று மீண்டும் அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட வேலாயுதம்பாளையத்தில் மிகுந்த காவல் துறை பாதுகாப்புக்கு இடையே பிரசாரம் செய்தாா். பிரசாரத்தை முடித்துக் கொண்டு கமல்ஹாசன் பிரசார மேடையில் இருந்து கீழே இறங்கும் போது அவரை நோக்கி முட்டை, கற்கள் வீசப்பட்டன.

கல் வீசி தாக்குதல் நடத்திய நடத்திய நபா்களை காவல் துறையினா் கைது செய்து அழைத்துச் சென்றனா். பிரசாரக் கூட்டத்தில் கல் வீசப்பட்டதால் அரவக்குறிச்சியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கோவை மாவட்டம் கூலூா் தொகுதியில் கமல்ஹாசன் நாளை பரப்புரை மேற்கொள்வதாக இருந்தது. ஆனால், இந்த பரப்புரை கூட்டத்திற்கு காவல் துறையினா் அனுமதி மறுத்துள்ளனா். இறுதிக்கட்ட வாக்குப்பதிவுக்கான பரப்புரைகள் வெள்ளிக் கிழமை மாலையுடன் ஓய்வடையும் நிலையில், கமல்ஹாசனின் பரப்புரைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி