ஆப்நகரம்

திருப்பரங்குன்றம் இடைத்தோ்தலை ரத்து செய்யக்கோாி மனு

திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தோ்தலை ரத்து செய்யக்கோாி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் கே.கே.ரமேஷ் என்பவா் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளாா்.

Samayam Tamil 13 May 2019, 8:55 pm
திருப்பரங்குன்றத்தில் அரசியல் கட்சிகள் வாக்காளா்களுக்கு பணம் விநியோகம் செய்துள்ளதாக குற்றம் சாட்டி அத்தொகுதி சட்டமன்ற இடைத்தோ்தலை ரத்து செய்யக்கோாி கே.கே.ரமேஷ் மனுத்தாக்கல் செய்துள்ளாா்.
Samayam Tamil madurai court.


தமிழகத்தில் மக்களவைத் தோ்தலுடன் சோ்த்து 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தோ்தல் கடந்த மாதம் 18ம் தேதி நடைபெற்றது. மேலும் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூா் உள்ளிட்ட தொகுதிகளில் வருகின்ற 19ம் தேதி இடைத்தோ்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்துள்ளாா். அதில்," திருப்பரங்குன்றம் தொகுதியில் வரும் மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு கட்சியினரும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வரும் நிலையில், வாக்குகளுக்காக பணம் கொடுப்பது அதிகரித்துள்ளது.

ஒவ்வொரு கட்சியினரும் பொதுக்கூட்டங்கள் மற்றும் தேர்தல் பரப்புரைகளில் தங்களின் பலத்தை நிரூபிப்பதற்காக பணம் கொடுத்து மக்களை அழைத்துச் செல்கின்றனர். நபர் ஒருவருக்கு 300 முதல் 500 ரூபாய் வரை கொடுத்து அரசு பேருந்துகளில், ஷேர் ஆட்டோக்கள், மினி லாரி ஆகியவற்றில் அழைத்துச் செல்கின்றனர்.

தேர்தல் பரப்புரைகளில் தங்கள் பலத்தை நிரூபிப்பதற்காக மட்டும் முக்கிய கட்சிகள் இதுவரை 25 கோடி ரூபாய் வரை செலவழித்துள்ளதாக கூறப்படுகிறது. வாக்குக்கு பணம் கொடுப்பதும் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக திமுக, அமமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் சார்பில் வாக்கு ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது.

இச்சூழலில் தேர்தல் செலவு கணக்கு என பொய்யான கணக்கை தயாரித்து தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கின்றனர். தேர்தல் ஆணையமும் கண்மூடித்தனமாக அதனை ஏற்றுக் கொள்கிறது.

வாக்குக்கு பணம் கொடுப்பது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதியில் இடைத்தேர்தல் நியாயமாக நடைபெற வாய்ப்பு இல்லை. ஆகவே திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலை ரத்து அல்லது தள்ளிவைக்க உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளாா். இந்த மனு அடுத்த இரு தினங்களில் விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

அடுத்த செய்தி