ஆப்நகரம்

ஜெயிக்க வச்ச இரட்டை இலைக்கு துரோகம் செய்த செந்தில் பாலாஜி - செந்தில்நாதன் ஆவேச பிரச்சாரம்!

அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Samayam Tamil 1 May 2019, 8:28 pm
வரும் 19ஆம் தேதி 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அரவக்குறிச்சி அதிமுக வேட்பாளர் செந்தில் நாதன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
Samayam Tamil Senthilnathan


அப்போது பேசிய அவர், 2011ஆம் தேர்தலில் செந்தில் பாலாஜி கே சி பழனிசாமி உடன் கூட்டணி சேர்ந்து, சில உள்ளடி வேலைகள் செய்து என்னை தோற்கடித்துவிட்டனர். கடந்த இடைத்தேர்தலில் அரவக்குறிச்சியில் எனக்கு பொறுப்பு அளிக்கப்பட்டது.

அதன் பேரில் கடினமாக உழைத்து, செந்தில் பாலாஜியை இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெறச் செய்தோம். ஆனால் இன்று திமுகவில் சேர்ந்து கொண்டு, இரட்டை இலை சின்னத்திற்கே எதிராக வாக்கு சேகரிக்கிறார்.

அதற்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும். 2011ஆம் ஆண்டு எந்த தவறும் செய்யாத எனக்கு நிறைய தண்டனை கிடைத்தது. இதேபோல் அவருக்கும் மக்கள் தண்டனை கொடுக்க வேண்டும். என்னை ஜெயிக்க வைக்க வேண்டும்.

நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து, உங்கள் வீட்டு பிள்ளையாக பிரச்சனைகளை தீர்த்து வைப்பேன். பதவி வேண்டும் என்று ஓடக்கூடியவர் செந்தில் பாலாஜி. அவர் பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து வெற்றி பெற்று விடலாம் என்று நினைக்கிறார்.

ஆனால் மக்கள் அவரை புறக்கணித்துவிட்டனர். வேட்புமனு தாக்கல் செய்த போதே, ஆயிரக்கணக்கான மக்கள் எனக்கு ஆதரவு தந்துள்ளீர்கள். எனவே அதிமுக வேட்பாளரான என்னை வெற்றி பெறச் செய்வீர்கள் என்று நம்புவதாக கூறினார்.

அடுத்த செய்தி