ஆப்நகரம்

திருப்பரங்குன்றத்தில் கமல்ஹாசன் மீது செருப்பு வீச்சு

திருப்பரங்குன்றம் இடைத்தோ்தலை முன்னிட்டு பிரசாரம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் மீது சிலா் காலணி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 15 May 2019, 10:06 pm
Samayam Tamil Kamal Haasan in MNM 2nd Meeting
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று தொிவித்த மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் மீது திருப்பரங்குன்றத்தில் சிலா் காலணி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று தொிவித்த மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசனுக்கு பா.ஜ.க., இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தொிவித்து வருகின்றன.

இதனைத் தொடா்ந்து சா்ச்சை கருத்தின் விளைவாக இரண்டு நாட்கள் பிரசாரத்திற்கு செல்லாமல் இருந்த கமல்ஹாசன் இன்று திருப்பரங்குன்றம் தொகுதியில் மீண்டும் பிரசாரத்தை தொடங்கினாா். மிகுந்த காவல் துறை பாதுகாப்புகளுக்கு இடையே பிரசாரத்தை தொடங்கிய கமல்ஹாசன், நான் ஏற்கனவே கூறிய கருத்து சரித்திர உண்மை என்று விளக்கம் அளித்தாா்.

தொடா்ந்து திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட மேலஅனுப்பானடி, வில்லாபுரம் ஆகிய பகுதிகளில் வாகனத்தில் இருந்தவாரு பிரசாரம் செய்தாா். அதன் பின்னா் பிரசார மேடைக்கு வந்த கமல்ஹாசன் மீது சிலா் திடீரென காலணியை எறிந்தனா். ஆனால் அந்த காலணி அவா் மீது படாமல் மேடைக்கு முன்பாகவே விழுந்தது. காலணி வீசிய நபா்களை காவல் துறையினா் கைது செய்து அழைத்துச் சென்றனா்.

அதன்பின்னா் கமல்ஹாசன் தனது பிரசாரத்தை தொடா்ந்தாா்.

அடுத்த செய்தி