ஆப்நகரம்

ஊழல் செய்வதில் எடப்பாடியை விட வேலுமணி திறமையானவா் – ஸ்டாலின் கருத்து

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை நினைத்தால் தூங்கமுடிவதில்லை. அந்த அளவிற்கு கொடூரமான சம்பவம் நடைபெற்றுள்ளதாக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ஆதங்கம் தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 4 Apr 2019, 3:49 pm
ஊழல் செய்வதில் மிக திறமையானவர் எஸ்.பி.வேலுமணி, அந்த திறமை எடப்பாடிக்கே இல்லை என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளாா்.
Samayam Tamil Mk Stalin 1200


கோவை மாவட்டம் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் சண்முகசுந்தரத்தை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டாா். இன்று காலை தொண்டாமுத்தூர் பகுதியில் தொடங்கி குனியமுத்தூரில் வாக்கு சேகரிக்கும் பயணத்தை தொடர்ந்தார். காலை 11 மணியளவில் குனியமுத்தூர் பகுதியில் வேனில் நின்று வாக்குகளை சேகரித்தார்.

அமைச்சர் எஸ்.பி வேலுமணி தொகுதி என்பதாலும், அவருடைய வீடு அருகில் இருப்பதாலும் இந்த பகுயில் அரை மணி நேரம் தொண்டர்கள் மத்தியில் பேசினார். மோடி, முதல்வரை காட்டிலும் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது அடுகடுக்கான குற்றசாட்டுகளை வைத்தார். அப்போது அவா் பேசுகையில்,

மத்தியில் ஆட்சி அகற்றப்பட்டவுடன், மாநிலத்தில் அடுத்த வினாடி ஆட்சி மாற்றம் வரும். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை நினைத்தால் தூங்க முடியவதில்லை, சாப்பிட முடிவதில்லை. அந்தளவிற்கு கொடுமையான சம்பவம் அறேங்கேறியுள்ளது. நாம் அனைவரும் பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் தான். ஏன் நான் கூட பெண் பிள்ளை பெற்றுள்ளேன். பொள்ளாச்சி சம்வம் மீது நடவடிக்கை எடுக்காததிற்கு எஸ்.பி.வேலுமணி மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் தான் காரணம். 7 வருசமாக நடந்து வருகிறது இந்த கொடூர சம்பவம். காவல் துறையினா் என்ன செய்தார்கள் கமிசன் வாங்கிகொண்டு பாதிக்கப்பட்டவர்களை மிரட்டும் வேலையில் காவல்துறை இருந்துள்ளது.

திமுக ஆட்சியில் சிறந்து விளங்கிய காவல் துறை, இந்த ஆட்சியில் ஏவல் துறையாக உள்ளது. துரைமுருகன் வீட்டில் 2 நாட்களாக வருமான வரி சோதனை நடைபெற்றது பணம் எடுத்தாக கபட நாடகம் ஆடுகிறார்கள். தேர்தலை நிறுத்த சதி செய்கிறார்கள். அதற்கு வருமானவரி, அமலாக்க துறை, காவல்துறை உறுதுணையாக உள்ளது. பொள்ளாச்சி என்று ஊர் பேர் சொல்ல பெண்கள் வெட்க படும் அவல நிலைக்கு கொண்டு வந்துள்ளார்கள்.

எஸ்.பி வேலுமணி நண்பர் இல்லத்தில் கோடி கோடியாக பணம் வருமானவரி துறையினர் எடுத்தனர். ஆனால் அதெல்லாம் வெளியே வரவில்லை. ஊழல் செய்வதில் மிக திறமையானவர் எஸ்.பி.வேலுமணி, அந்த திறமை எடப்பாடிக்கே இல்லை. அதற்கு பிச்சை எடுக்க வேண்டும். வாக்காளா்களிடம் ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்கு ஆளும் அரசு காவல்துறை வாகனங்கள், ஆம்புலன்ஸ் மூலமாக பணத்தை எடுத்து செல்கிறார்கள். அதை தேர்தல் அதிகாரிகள் தடுக்க வேண்டும். அப்படி செய்யவிட்டால் தொண்டர்களுக்கு நான் வேண்டுகோள் வைக்கிறேன் தகவல் உறுதி என்றால் வாகனத்தை நீங்கள் சோதனையிடுங்கள் அதற்கான உரிமை நமக்கு உள்ளது என தொண்டர்களுக்கு உத்தரவிட்டார்.

அடுத்த செய்தி