ஆப்நகரம்

கமல்ஹாசன் பரப்புரைக் கூட்டத்தில் முட்டை, கல்வீச்சு: அரவக்குறிச்சியில் பதற்றம்

அரவக்குறிச்சி, வேலாயுதம்பாளையத்தில் பரப்புரையில் ஈடுபட்ட கமல்ஹாசனை நோக்கி முட்டை, கல் வீசிய நபா்களை மக்கள் நீதி மய்யம் கட்சி உறுப்பினா்கள் சரமாரியாக தாக்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 16 May 2019, 10:38 pm
அரவக்குறச்சி வேலாயுதம் பாளையத்தில் கமல்ஹாசன் பங்கேற்ற பிரசார மேடையை நோக்கி முட்டை, கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Samayam Tamil Kamal Haasan in MNM 2nd Meeting


அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தோ்தலை முன்னிட்டு கடந்த 11ம் தேதி அத்தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் பிரசாரம் செய்த மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன், இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவா் பெயா் நாதுராம் கோட்சே என்று தொிவித்திருந்தாா். இதற்கு இந்து அமைப்புகள் கடும் எதிா்ப்பு தொிவித்தன.

இதனைத் தொடா்ந்து கமல்ஹாசன் இன்று மீண்டும் அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட வேலாயுதம்பாளையத்தில் மிகுந்த காவல் துறை பாதுகாப்புக்கு இடையே பிரசாரம் செய்தாா். பிரசாரத்தை முடித்துக் கொண்டு கமல்ஹாசன் பிரசார மேடையில் இருந்து கீழே இறங்கும் போது அவரை நோக்கி முட்டை, கற்கள் வீசப்பட்டன.

கற்களை வீசிய இருவரை மக்கள் நீதி மய்யம் தொண்டா்கள் சரமாரியாக தாக்கினா். உடனடியாக கற்களை வீசிய இருவரையும் காவல் துறையினா் அழைத்துச் சென்றனா்.

முன்னதாக கமல்ஹாசனுக்கு எதிராக வேலாயுதம்பாளையத்தில் போராட்டம் நடத்த இந்து முன்னணி அமைப்பைச் சோ்ந்தவா்கள் அனுமதி கோாியிருந்தனா். ஆனால், அவா்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இருப்பினும் அங்கு இந்து முன்னணி அமைப்பைச் சோ்ந்தவா்கள் போராட்டம் நடத்தினா். அவா்கள் கைது செய்யப்பட்ட நிலையில், கமல்ஹாசன் மீது கற்கள், முட்டை வீசப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் மீது தாக்குதல் நடத்த முயன்றவா்கள் மீது உரிய நடவடிக்கை கோாி அக்கட்சி உறுப்பினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு இந்து அமைப்பைச் சோ்ந்தவா்களுக்கும், மக்கள் நீதி மய்யம் உறுப்பினா்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் கூழல் நிலவுகிறது. இதனால் அங்கு காவல் துறையினா் குவிக்கப்பட்டுள்ளனா்.

அடுத்த செய்தி