ஆப்நகரம்

மதுரையில் 3 கிலோ தங்கம் பறிமுதல்- அதிகாரிகள் விசாரணை

மதுரையில் தேர்தல் விதிகள் அமலில் இருக்கும் நிலையில், சித்தம்பட்டி சுங்கச் சாவடி அருகே மூன்று கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Samayam Tamil 6 May 2019, 6:17 pm
தமிழகத்தில் எஞ்சியுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் மே 19ம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு மதுரை, கோயம்புத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் தேர்தல் விதிகள் அமலில் உள்ளன.
Samayam Tamil மதுரையில் தேர்தல் விதி அமலில் உள்ள நிலையில்  3 கிலோ தங்கம் பறிமுதல்
மதுரையில் தேர்தல் விதி அமலில் உள்ள நிலையில் 3 கிலோ தங்கம் பறிமுதல்


இதனால் அந்தந்த மாவட்டங்களில் தேர்தல் பறக்கும் படையின் தீவிர வாகன கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மதுரை சித்தம்பட்டி சுங்கச் சாவடி அருகே பறக்கும் படையினர் வாகனங்களை சோதனையிட்டு வந்தனர்.

அப்போது அங்கே வந்த காரை நிறுத்திய அதிகாரிகள், அதற்குள் சோதனையிட்டனர். காருக்குள் பல தங்க நகைகள் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதனால் காரிலிருந்தவர்களை கீழே இறக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

அவர்கள், சென்னையில் இருந்து இந்த நகைகள் கொண்டுவரப்படுவதாகவும், மதுரையில் உள்ள சில நகைக் கடைகளுக்கு இதை வழங்க வேண்டும் என்று கூறினர். எனினும், உரிய ஆவணங்கள் இல்லாததால், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நகைகள் கைப்பற்றினர்.

உரிய ஆவணங்களை காட்டி, தங்க நகைகளை எடுத்துச் செல்லுமாறு வாகனத்தில் வந்தவர்களிடம் அலுவலகர்கள் அறிவுறுத்திச் சென்றனர்.

அடுத்த செய்தி