ஆப்நகரம்

AIADMK: சட்டமன்றத்தில் எங்களுக்கே அதிக பலம் - வெற்றி பெற்ற 9 அதிமுக எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு!

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 9 அதிமுக எம்.எல்.ஏக்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

Samayam Tamil 29 May 2019, 10:15 am
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி, 38 மக்களவை தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. இதையடுத்து மே 19ஆம் தேதி 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றுள்ளது.
Samayam Tamil ADMK MLAs


22 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக, 9 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது. இதன்மூலம் சட்டமன்றத்தில் அதிமுகவின் பலம் 123ஆக உயர்ந்துள்ளது. எனவே பெரும்பான்மையுடன் ஆளுங்கட்சியான அதிமுக, ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் இன்று பதவியேற்றுக் கொண்டனர். சபாநாயகர் தனபால் அறையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில், அமைச்சர்கள், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக எம்.எல்.ஏக்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள்:

பரமக்குடி - என்.சதன் பிரபாகரன்
சோளிங்கர் - ஜி சம்ப்த்
சூலூர் - கந்தசாமி
விளாத்திகுளம் - பி சின்னப்பன்
சாத்தூர் - எம்.எஸ்.ஆர் ராஜவர்மன்
அரூர் - வி.சம்பத் குமார்
நிலக்கோட்டை - தேன்மொழி
மானாமதுரை - எஸ்.நாகராஜன்
பாப்பிரெட்டிபட்டி - ஏ.கோவிந்தசாமி

அடுத்த செய்தி