ஆப்நகரம்

Tamil Nadu By Elections Live: நாளை பிரசாரத்தை தொடங்குகிறாா் விஜயகாந்த்

4 தொகுதி இடைத்தேர்தலிலும் அ.ம.மு.க.விற்கு பரிசு சின்னம் ஒதுக்கக்கோரி தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி சார்பில் தமிழக தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்தது.

Samayam Tamil 14 Apr 2019, 3:28 pm
தமிழகத்தில் மக்களவை, சட்டமன்ற தோ்தல்கள் வருகின்ற 18ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தமிழகம் உட்பட நாடு முழுவதும் அரசியல், தோ்தல் தொடா்பாக நடைபெறும் செய்தி சுருக்கங்களின் தொகுப்பை இங்கு காணலாம்.
Samayam Tamil ELection Updates



தேமுதிக தலைவா் விஜயகாந்த் நாளை பிரசாரம் செய்கிறாா் – பிரேமலதா
தேமுதிக தலைவா் விஜயகாந்த் நாளையும், நாளை மறுநாளும் சென்னையில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடுவாா் என்று அக்கட்சியின் பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் தொிவித்துள்ளாா்.

எட்டு வழி சாலை என்ற தவறான திட்டத்திற்கு 10,000 கோடி ஒதுக்கியது கூறுகெட்ட எடப்பாடி அரசு
எட்டு வழி சாலை என்ற தவறான திட்டத்திற்கு 10,000 கோடி ஒதுக்கியது கூறுகெட்ட எடப்பாடி அரசு என கொடைக்கானலில் நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் திமுக தலைமை கழக பேச்சாளர் பழ கருப்பையா பேசினார்.

ஒரு கிராமத்தையே முன்னேற்ற முடியாத கனிமொழி: தமிழிசை சாடல்
ஒரு கிராமத்தையே முன்னேற்ற முடியாத கனிமொழி, எப்படி தூத்துக்குடியை முன்னேறுவார் என தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.

”எங்கள் வாக்கு இவருக்கு தான்” அனிதாவின் அண்ணன் பகிரங்க அறிவிப்பு
கமல்ஹாசனின் வீடியோவுக்கு பதில் தெரிவிக்கும் விதமாக, அரியலூர் மாணவி அனிதாவின் அண்ணன் மணிரத்தினம், நாங்கள் யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம் என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

நான்கு தொகுதிகள் இடைத்தேர்தல்: பரிசுப்பெட்டி சின்னம் கோரி அமமுக மனு
கமல்ஹாசனின் வீடியோவுக்கு பதில் தெரிவிக்கும் விதமாக, அரியலூர் மாணவி அனிதாவின் அண்ணன் மணிரத்தினம், நாங்கள் யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம் என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி