ஆப்நகரம்

தினகரன் கட்சி துவங்கினால் அந்த 3 எம்.எல்.ஏ-க்களின் கதி என்னவாகும்?

இந்திய அரசியல் சட்டத்தின் 10 வது அட்டவணையில் உள்ள கட்சித் தாவல் தடை சட்டம் ராஜிவ் காந்தி பிரதமராக இருந்த போது, 1985ல் 52வது அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்டது.

Samayam Tamil 20 Apr 2019, 3:08 pm
இந்திய அரசியல் சட்டத்தின் 10 வது அட்டவணையில் உள்ள கட்சித் தாவல் தடை சட்டம் ராஜிவ் காந்தி பிரதமராக இருந்த போது, 1985ல் 52வது அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்டது.
Samayam Tamil admk logo


கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் ஒரு நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர், தானாக முன்வந்து தான் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் கட்சியிலிருந்து விலகினால், அவர் தனது உறுப்பினர் பதவியை இழப்பார்.
நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர் சார்ந்திருக்கும் கட்சியின் கொறடா பிறப்பிக்கும் உத்தரவுக்கு மாறாக நாடாளுமன்ற/சட்டமன்ற வாக்கெடுப்பில் வாக்களித்தாலோ, அல்லது வாக்கெடுப்பைப் புறக்கணித்தாலோ பதவி இழப்பார்.

ஒரு உறுப்பினர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டாலும், கட்சி தாவல் தடுப்பு சட்டப்படி அவர் தேர்தலில் நிறுத்திய அரசியல் கட்சியைச் சேர்ந்தவராகவே கருதப்படுவார்" என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பின் விளைவாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருந்தாலும் சட்டமன்ற உறுப்பினரோ, நாடாளுமன்ற உறுப்பினரோ கட்சிக் கொறடாவின் கட்டளைக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும். கட்சிக் கொறடா கட்டளையை மீறினால் பதவி பறிபோகும். இவ்வாறு கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் வேறு கட்சியில் சேர்ந்தாலும் பதவி பறிபோகும்.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான அறந்தாங்கி தொகுதி ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் தொகுதி கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி தொகுதி பிரபு ஆகியோர் முன்னதாக அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏ-க்களாகத் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்கள் தற்போது அதிமுகவில் உள்ளனர். இவர்கள் தற்போது டிடிவி தினகரனுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். ஒருவேளை இவர்கள் எதிர்காலத்தில் டிடிவி தினகரன் துவங்கப்போகும் கட்சிக்கு தாவ முற்பட்டால் கட்சித் தாவல் தடைச்சட்டத்தின் அடிப்படியில் இவர்களது பதவி பறிபோகும் நிலை உருவாகலாம்.

அடுத்த செய்தி