ஆப்நகரம்

தெலுங்கானாவில் டிஆர்எஸ் சுனாமி; காணாமல் போன காங்., -கருகிய தாமரை

தொலுங்கானா மாநிலத்தின் தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. தற்போது உள்ள நிலவரப்படி ஏற்கனவே ஆட்சியில் இருந்த டிஆர்எஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Samayam Tamil 11 Dec 2018, 12:12 pm
ஏற்கனவே தெலுங்கானாவில் ஆட்சியில் இருந்த டிஆர்எஸ் தங்களது ஆட்சிகாலம் முடிவடைவதற்கு 9 மாதங்களுக்கு முன்னரே பதவியை ராஜினாமா செய்தது. இதையடுத்து அந்த மாநிலத்திற்கு பொதுதேர்தல் வந்தது.
Samayam Tamil bjp cong


ஏற்கனவே தேர்தல் நடக்கவிருந்த மிசோரம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியபிரதேச மாநிலங்களுடன் சேர்ந்து தெலுங்கானா தேர்தலும் நடத்தப்பட்டது. இந்த தேர்தலின் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில் டிஆர்எஸ் அட்சியமைப்பதற்கு தேவையான இடங்களுக்கு அதிகமாக இடத்தில் தற்போது முன்னிலையில் உள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு பொது தேர்தலின் போது அந்த கட்சிக்கு பெரும் ஆதரவு இருந்தது. அப்பொழுது தனி மாநில கோரிக்கைக்காக டிஆர்எஸ் கட்சி நடத்திய பெரும் போராட்டம் மக்கள் மத்தியில் வாக்குகளை அள்ளி குவித்தது.

இதன்காரணமாக மொத்தம் இருந்த 119 தொகுதிகளில் 63 இடங்களை டிஆர்எஸ் தனித்து கைப்பற்றியது. இதை கொண்டு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. காங்., 13 இடங்களையும், ஏஐஎம்ஐஎம் 7 இடங்களையும், பா.ஜ., 5 இடங்களையும், டிடிபி 3 இடங்களையும், சிபிஐ 1 இடத்தையும் பிடித்தது.

தற்போது ஏறத்தழ டிஆர்எஸ் 90க்கும் மேற்பட்ட தொகுதிகளை பிடிக்கும் எனவும் கடந்த தேர்தலில் 13 இடங்களை பிடித்த காங்., இந்த தேர்தலில் அதை விட அதிக இடங்களை பிடிக்கும் எனவும் தேர்தல் முன்னிலை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தேர்தலில் தெலுங்கானாவில் பா.ஜ., தங்களது வாக்கு வங்கியை இழக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி