ஆப்நகரம்

எலெக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி : காங்., புகார்

தெலுங்கானாவில் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்தரத்தில் மோசடி நடந்துள்ளதாக அம்மாநில காங்., புகார் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 11 Dec 2018, 1:53 pm
தெலுங்கானா மாநிலத்திற்கான தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதல் டிஆர்எஸ் முன்னிலையில் இருந்து வருகிறது.
Samayam Tamil DuHsuJ0X4AA_gci


தற்போது உள்ள நிலவரம்படி டிஆர்எஸ் 90க்கும் மேற்பட்ட சீட்களையும் காங்., சுமார் 15 சீட்களையும் பிடிக்கலாம் என்ற நிலை உள்ளது.

இந்நிலையில் ஐதராபாத்தில் காங்., கட்சியை சேர்ந்த சிலர் குழுவாக தெலுங்கானா தலைமை தேர்தல் அதிகாரியான ராஜத் குமாரிடம் மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தில் சந்தேகம் இருப்பதாகவும், மாநிலம் முழுவதிலும் உள்ள வாக்குபதிவு இயந்திரத்தில் மோசடி நடந்திருக்கலாம் எனவும் புகார் தெரிவித்துள்ளனர்

தற்போது சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலத்தில் காங்., முன்னனியில் உள்ளது. மத்தியபிரதேசத்தில் காங்., பா.ஜ. இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இதனிடையே தெலுங்கானாவில் காங்., பலத்த அடியை சந்தித்துள்ள நிலையில் இந்த புகாரை வழங்கியுள்ளது.

அடுத்த செய்தி