ஆப்நகரம்

மக்கள் எல்லாம் டிஆர்எஸ்க்கு ஏன் மீண்டும் ஓட்டு போட்டார்கள் தெரியுமா?

தெலுங்கானாவில் பெரும்பான்மையான மக்கள் டிஆர்எஸ் கட்சிக்கே வாக்களித்துள்ளனர். இதற்கு முக்கியமான காரணம் இதற்க முன்னர் அவர்கள் கொண்டு திட்டங்கள் தான். அப்படி என்னதான் திட்டகளை கொண்டு வந்து விட்டார்கள் பார்க்கலாம் வாருங்கள்.

Samayam Tamil 11 Dec 2018, 4:47 pm
தெலுங்கானாவை பொறுத்தவரை டிஆர்எஸ் கட்சி யாரும் எதிர்பாரத விதமாக வெற்றியை கைப்பற்றி வருகிறது. ஏற்கனவே இந்த கட்சிதான் ஆட்சியில் இருந்தது. தற்போது மீண்டும் இந்த கட்சியையே மக்கள் தேர்ந்தேடுத்திருக்கிறார்கள் என்றால் நிச்சயம் அதற்கு முக்கிய காரணம் இதற்கு முன்பு டிஆர்எஸ் ஆட்சியில் இருந்தபோது கொண்டு வந்த திட்டங்களாக தான் இருக்கும்.
Samayam Tamil votes


அப்படி என்னதான் திட்டங்களை கொண்டு வந்துவிட்டார்கள் பார்க்கலாம் வாருங்கள்..

விவசாயிகளுக்கு மானியமாக தெலுங்கானாவில் பருவத்திற்கு ஏக்கருக்கு 4 ஆயிரம் வழங்கப்பட்டது. ஆண்டிற்கு இரண்டு பருவங்கள் தெலுங்கானாவில் உள்ளது. இதன் படி ஒரு விவசாயி 5 ஏக்கர் நிலம் வைத்திருந்துவிவசாயம் செய்தால் அவர் ஆண்டுதோறும் ரூ 40 ஆயிரத்தை பெறலாம். இது விவசாயிகளுக்கு பெரும் பலனை தந்துள்ளது.

அடுத்தாக கல்யாணலட்சுமி/ஷாதி முபாரக் என்ற திட்டத்தின் மூலம் தெலுங்கானாவில் திருமணமாகும் ஜோடிக்கு ரூ 10 ஆயிரம் வழங்கப்படும். மேலும் முதியவர்கள், மாற்று திறனாளிகள், விதவைகளுக்கு நேரடியாக பென்ஷன் வழங்கப்பட்டது.

இது மட்டும் அல்லாமல் கடந்த தேர்தலில் இவர் அனைவருக்கும் வீடு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன் பணிகளும் தற்போது நடந்து வருகிறது. இதற்கிடையில் 24 மணி நேரமும் மின்சாரம், குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளார்.

அடுத்த செய்தி