ஆப்நகரம்

பணத்தை மோடி திருடிவிட்டார்.. மம்தா பரபரப்பு குற்றச்சாட்டு!

கொரோனா மேலாண்மைக்கு வைத்திருந்த பணத்தை பிரதமர் மோடி திருடிவிட்டதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

Samayam Tamil 20 Mar 2021, 11:19 pm

ஹைலைட்ஸ்:

  • மோடி மீது மம்தா குற்றச்சாட்டு
  • துரோகிகள் வெளியேறியதால் நிம்மதி என பேச்சு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil mamata
மேற்கு வங்கத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. எனவே, அரசியல் தலைவர்கள் பிரச்சாரத்தில் பிஸியாக இருக்கின்றனர். இந்த முறை மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடித்துவிட வேண்டுமென பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், கொரோனா நெருக்கடி மேலாண்மைக்காக வைத்திருந்த பணத்தை பிரதமர் மோடி திருடிவிட்டார் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் அனுமதி விவகாரம்: விரைவில் முடிவு..!
கிழக்கு மெதினிபூரில் உள்ள பன்ஸ்குராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசியபோது, “கோவிட்-19 நெருக்கடி மேலாண்மைக்காக வைத்திருந்த பணத்தை பிரதமர் நரேந்திர மோடி திருடிவிட்டார்.

ரயில்வே, பிஎஸ்என்எல், வங்கிகளை விற்று நாட்டு மக்களிடம் இருந்து பல லட்சம் கோடிக்கணக்கான ரூபாயை பாஜக திருடிவிட்டது. பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட பணம், பிரதமர் கேர்ஸ் நிதி ஆகியவற்றுக்கு என்ன ஆனது என்பது குறித்து பாஜக உண்மையை சொல்ல வேண்டும்.

அரசு பள்ளியில் மதிய உணவுக்கு பதிலாக மாட்டு தீவனம்..!
மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு வேட்பாளர்கள் கிடைக்கவில்லை. எனவே, சில துரோகிகள் இப்போது பாஜக வேட்பாளர்கள் ஆகிவிட்டனர். துரோகிகள் வெளியேறியதால் எனக்கு நிம்மதி. எங்கள் கட்சி காப்பாற்றப்பட்டுவிட்டது” என்று பேசினார்.

அடுத்த செய்தி