ஆப்நகரம்

கோவையில் ஒரு கிலோ தங்கம் பறிமுதல்: பறக்கும் படையினர் அதிரடி

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் ஒரு கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்து பறக்கும் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 2 Apr 2019, 11:16 pm
பொள்ளாச்சியில் முறையான ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ஒரு கிலோ அளவிலான தங்க நகைகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
Samayam Tamil பொள்ளாச்சி வாகனச் சோதனையில் ஒரு கிலோ தங்கம் பறிமுதல்
பொள்ளாச்சி வாகனச் சோதனையில் ஒரு கிலோ தங்கம் பறிமுதல்


கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் உள்ள ராஜ வீதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தன. அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி அலுவலர்கள் பரிசோதனை செய்தனர்.

அந்த வாகனத்தில் சுமார் ஒரு கிலோ அளவிலான தங்க நகைகள் இருப்பதை அதிகாரிகள் சோதனை செய்தனர் எடுத்தனர். அதற்கான ஆவணங்களை அதிகாரிகள் கோரிய போது, வாகனத்தில் வந்தவர்களிடம் ஆவணங்கள் எதுவும் இல்லை.

மேலும் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கைப்பற்றப்பட்ட தங்க நகைகள் அனைத்தும் தனியார் நகைக் கடைக்கு சொந்தமானவை என தெரியவந்தது. ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் வாகனத்தை ஓட்டி வந்த வீரய்யன் மற்றும் கடை ஊழியர் நித்தின் ஆகியோரை தேர்தல் பறக்கும் படையினர், வருவாய் கோட்டாச்சியர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

மேலும் அதிகாரிகள் நகைகளை பறிமுதல் செய்தனர். பின்னர், பிடிப்பட்ட நகைகள் குறித்து வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு பறக்கும் படையினர் தகவல் அளித்தனர். கோட்டாச்சியர் அலுவலகத்திற்கு வந்த வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை ஆய்வு செய்தனர்.

அடுத்த செய்தி