ஆப்நகரம்

உதயசூரியனுக்கு ஆதரவு கேட்டு, ஊட்டியில் அனல்பறக்க பிரச்சாரம் செய்யும் ஆ.ராசா மனைவி!

நீலகிரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசாவிற்கு வாக்களிக்குமாறு, அவரது மனைவி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

Samayam Tamil 15 Apr 2019, 4:58 pm
தமிழகத்தில் வரும் 18ஆம் தேதி, 39 மக்களவை தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெறுகிறது.
Samayam Tamil Parameswari


இதையொட்டி அரசியல் கட்சிகள் இறுதிக் கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மக்களவை தொகுதியில் திமுக சார்பில் ஆ.ராசா போட்டியிடுகிறார். இவர் தொடர்ந்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் ஆ.ராசா மனைவி பரமேஸ்வரியும் பிரச்சாரக் களத்தில் குதித்துள்ளார். அவருடன் 50க்கும் மேற்பட்ட பெண்கள் வீடு, வீடாகச் சென்று பிரச்சாரம் செய்தனர். நல்லாட்சி அமைய உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்று துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்தார். நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட ஊட்டி, குன்னூர், கூடலூர், மேட்டுப்பாளையம், பவானிசாகர் மற்றும் அவிநாசி தொகுதியில் தினசரி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்.

முன்னதாக ஆ.ராசாவிற்கு ஆதரவாக நடிகர் உதயநிதி ஸ்டாலின், பழ.கருப்பையா, திருச்சி சிவா உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்தனர்.

அடுத்த செய்தி