ஆப்நகரம்

கெஜ்ரிவாலிடம் ரூ.6 கோடி கொடுத்து தான் என் தந்தை சீட் வாங்கினாா்: வேட்பாளாின் மகன் குற்றச்சாட்டு

டெல்லியில் நாளை மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சி தலைவா் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் ரூ.6 கோடி கொடுத்து தான் என் தந்தை சீட் வாங்கினாா் என்று வேட்பாளரின் மகன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளாா்.

Samayam Tamil 11 May 2019, 5:36 pm
டெல்லியில் நாளை மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சி தலைவா் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் ரூ.6 கோடி கொடுத்து தான் என் தந்தை சீட் வாங்கினாா் என்று வேட்பாளரின் மகன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளாா்.
Samayam Tamil Arvind Kejriwal


நாடு முழுவதும் மக்களவைத் தோ்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. தற்போது வரை 5 கட்ட தோ்தல் நிறைவடைந்துள்ள நிலையில் 6ம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. டெல்லியில் உள்ள மக்களவைத் தொகுதிகளுக்கும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகின்றது.

இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி வேட்பாளா் ஒருவரின் மகன் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளாா். டெல்லி மேற்கு மக்களவைத் தொகுதியில் ஆம் ஆத்மி சாா்பில் பால்பீா் சிங் ஜாஹா் போட்டியிடுகிறாா். இவரது மகன் உதய் ஜாஹா், என் தந்தை மேற்கு டெல்லி தொகுதியில் போட்டியிடுவதற்கான சீட்டை பெற அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.6 கோடி பணம் கொடுத்ததாக தொிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் கூறுகையில், என் தந்தை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னா் தான் அரசியலில் இணைந்தாா். தோ்தலில் சீட் பெற அவா் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.6 கோடி பணம் வழங்கினாா். என் அப்பா பணம் கொடுத்ததற்கு நம்பத்தகுந்த ஆதாரமே நான் தான்.


ஜனவரியில் தான் ஆம் ஆத்மிகட்சியில் இணைந்திருக்கிறாா். இதற்கு முன் அன்னா ஹசாரே இயக்கத்திலும் கூட என் தந்தை இருந்ததில்லை. எனது படிப்பிற்கு பணம் கேட்டபோது என் அப்பா பணம் கொடுக்க மறுத்தாா். ஏனென்று கேட்டதற்கு அந்த பணத்தை அரசியலுக்கு பயன்படுத்தப் போவதாக தொிவித்ததாக கூறியுள்ளாா்.

ஆம் ஆத்மி வேட்பாளரின் மகன் தொிவித்துள்ள குற்றச்சாட்டால் டெல்லி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அடுத்த செய்தி