ஆப்நகரம்

மதுரையில் பரபரப்பு; வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் - சிக்கினார் அதிமுக பிரமுகர்!

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து ரூ.50,000 பறிமுதல் செய்யப்பட்டு, 4 பேர் பிடிபட்டுள்ளனர்.

Samayam Tamil 17 Apr 2019, 4:23 pm

ஹைலைட்ஸ்:

  • மதுரையில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம்
  • அதிமுக நிர்வாகி தேவதாஸ் உட்பட 4 பேர் கைது
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
தமிழகத்தில் நாளை மக்களவை மற்றும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. கடைசி நேரத்தில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் வேலூர் மக்களவை தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து கனிமொழி வீட்டில் ஐடி ரெய்டு நடத்தப்பட்டது. தேனி ஆண்டிபட்டியில் அமமுக தேர்தல் அலுவலகத்தில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அங்கு துப்பாக்கிச்சூடு நடந்த சம்பவமும் அரங்கேறியது.

இந்த சூழலில் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு தலா ரூ.500 என கோடிக்கணக்கில் அதிமுகவினர் விநியோகித்து வருவதாக தகவல் வெளியானது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. உடனே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மதுரை சிம்மக்கல் தைக்கால் தெரு பகுதியில் உள்ள அலுவலகத்தில் அதிமுக நிர்வாகி தேவதாஸ் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்துகொண்டிருந்தார். அவரைப் போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.

அவரிடம் இருந்து வாக்காளர் பட்டியல் மற்றும் ரூ.50,000 மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகளை பறிமுதல் செய்தனர். இதையடுத்து தேவதாஸ் உட்பட 4 அதிமுக நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அடுத்த செய்தி