ஆப்நகரம்

அமேதியில் ராகுல் தோத்துட்டா? வீர வசனம் பேசிய சித்து, சொன்ன வாக்கை காப்பாற்றுவாரா!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதியில் தோல்வி அடைந்ததால், காங்கிரஸ் அமைச்சர் சித்து அடுத்து என்ன செய்வார் என்று கேள்வி எழுந்துள்ளது.

Samayam Tamil 24 May 2019, 8:02 am
17வது மக்களவைக்கான தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. அதில், யாரும் எதிர்பார்த்திராத வகையில், அமேதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தோல்வி அடைந்துள்ளார்.
Samayam Tamil Sidhu


அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் ஸ்மிருதி இரானி, சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளார். அதேசமயம் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தின் போது பஞ்சாப் மாநில காங்கிரஸ் அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான சித்து பேசுகையில், அமேதியில் ராகுல் தோல்வியை தழுவினால், நான் அரசியலை விட்டு விலகத் தயார் என்று கூறியிருந்தார்.

ஆனால் அவரது நம்பிக்கை வீண்போய்விட்டது. அமேதி மக்களவை தொகுதியில் ராகுல் காந்தி தோற்றுள்ளார். இது சித்துவிற்கு நிச்சயம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும். சொன்ன வாக்குறுதிபடி, சித்து அரசியலை விட்டு விலகத் தயாரா என்று சமூக வலைத்தளங்களில் பலரும் கேள்வி எழுப்பத் தொடங்கிவிட்டனர்.

இதனை பாஜகவினர் கையில் எடுத்துக் கொண்டு, சித்துவை நோக்கி விமர்சனங்களை முன்வைக்க ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் #SiddhuQuitPolitics என்ற ஹேஸ்டேக் தற்போது டுவிட்டரில் வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி