ஆப்நகரம்

அமமுக நிலக்கோட்டை வேட்பாளர் தங்கதுரை மீது அ.தி.மு.க.வி.,னர் தேர்தல் ஆணையத்தில் புகார்

சிறுவர்களை பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய நிலக்கோட்டை அமமுக வேட்பாளர் மீது அதிமுக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 12 Apr 2019, 12:30 pm
அனுமதியின்றி சிறுவர்களை பிரச்சார வாகனத்தில் ஏற்றிச் சென்றதாக நிலக்கோட்டை அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் தங்கதுரை மீது அ.தி.மு.க.வி.,னர் தர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil AMMK


திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சட்டடமன்ற இடைத்தர்தலலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளராக களத்தில் நிற்பவர் தகுதி நீக்க எம்.எல்.ஏ., க்களில் ஒருவராக தங்கதுரை. கட்சி தலைமை பாராமுகமாக இருந்தாலும் தனது ஆதரவு நிர்வாகிகளை உடன் வைத்து தன்னால் முடிந்த பகுதிகளுக்கு சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து ஆதரவு திரட்டி வருகிறார் வேட்பாளர் தங்கதுரை. இந்நிலையில் கடந்த 10-ம் தேதி இரவில் தனது பிரசச்சார வாகனத்தில அனுமதி இல்லாமல் சிறுவர்களை அழைத்துச் சென்று பிரச்சாரத்தில் ஈடபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தள்ளது.

நிலக்கோட்டை அ.தி.மு.க., நிர்வாகி செந்தில்குமார் என்பவர் நிலக்கோட்டை தேர்தல் நடத்தும் அலுவலர் ஜீனத் அவர்களிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். தனது கட்சி தலைமையோ, மாவட்ட நிர்வாகமோ தன்னுடன் பிரச்சாரத்திற்க்கு வரவில்லை என்ற கவலை ஒரு புறம் இருக்க தற்போது தேர்தல் விதிமுறை மீறல் புகாரும் அ.ம.மு.க., வேட்பாளர் தங்கதுரைக்கு கூடுதல் நெருக்கடி என கருதப்படுகிறது.

அடுத்த செய்தி