ஆப்நகரம்

பிரதமர் மோடியின் செய்தியாளர் சந்திப்பு குறித்து அகிலேஷ் யாதவ் விமர்சனம்

பிரதமர் மோடியின் செய்தியாளர் சந்திப்பு, அவர் வழக்கமாக வானொலியில் உரையாற்றும் மன் கி பாத் நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது போல இருந்ததாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார்.

Samayam Tamil 18 May 2019, 7:46 pm
பிரதமர் மோடியின் செய்தியாளர் சந்திப்பு, அவர் வழக்கமாக வானொலியில் உரையாற்றும் மன் கி பாத் நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது போல இருந்ததாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார்.
Samayam Tamil akilesh yadav


டெல்லியிலுள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் தலைவர் அமித் ஷாவுடன் இணைந்து, பிரதமர் மோடி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். இதில் பிரதமர் மோடி உரையாற்றினாலும், செய்தியாளர்களின் கேள்விக்கு அமித்ஷா மட்டுமே பதிலளித்தார்.

இதை குறிப்பிட்டு, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் ஒவ்வொரு மாதமும் பிரதமர் மோடி உரையாற்றும் மன் கி பாத் நிகழ்ச்சி, வானொலிக்கு பதிலாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது போல், இந்த செய்தியாளர் சந்திப்பு இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த சந்திப்பின் போது பிரதமரின் பேச்சு மற்றும் உடல் மொழிகள் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளும் வகையில் இருந்ததாகவும், அகிலேஷ் யாதவ் தமது பதிவில் விமர்சித்துள்ளார்.

அடுத்த செய்தி