ஆப்நகரம்

அலங்காநல்லூரில் நினைவுச் சின்னம்; முதல்வர் உறுதி

ஜல்லிக்கட்டு மீட்கப்பட்டதை நினைவு கூறும் விதமாக அலங்காநல்லூரில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

Samayam Tamil 6 Apr 2019, 12:04 pm
ஜல்லிக்கட்டு மீட்கப்பட்டதை நினைவு கூறும் விதமாக அலங்காநல்லூரில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
Samayam Tamil eps cm edappadi palanisamy


மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் தேனி வேட்பாளர் ரவீந்திரநாத் குமாரை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்து அவர் பேசினார். ஜல்லிக்கட்டு மீட்டுத்தந்தது அதிமுக ஆட்சி. அலங்காநல்லூர் தனி தாலுகா வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலனையில் உள்ளது. திமுக போன்ற பொய்யான வாக்குறுதிகளை நாங்கள் தர மாட்டோம்.

எதைச் செய்யமுடியுமோ அதை மட்டுமே வாக்குறுதியாக தருவோம். முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை நிச்சயம் 152 அடியாக உயர்த்தி சட்ட ரீதியான வெற்றியை அதிமுக பெறும். ஜல்லிக்கட்டு காளையை அடக்குவது போன்ற சிலை நினைவுச் சின்னமாக அலங்காநல்லூரில் நிறுவப்படும். சாத்தையாறு அணை பராமரிப்புக்காக மூன்றரை கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

அடுத்த செய்தி