ஆப்நகரம்

தொடரும் சம்பூர்ணம் சர்ச்சை; காத்திருப்போர் பட்டியலில் மதுரை காவல் உதவி ஆணையர்!

வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு தொடர்பான சர்ச்சையில், மதுரை காவல் உதவி ஆணையர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார..

Samayam Tamil 30 Apr 2019, 6:32 pm
மதுரை மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பதிவு இயந்திரங்கள், மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. அதன் மற்றொரு அறையில் ஆவணங்கள் இருக்கின்றன.
Samayam Tamil Mohandas ACP


இந்நிலையில் கலால் வட்டாட்சியர் சம்பூர்ணம், இடைநிலை உதவியாளர்கள் இரண்டு பேர், துப்புரவு தொழிலாளர் என 4 பேர், ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு சென்று, அவற்றை நகல் எடுத்துள்ளார்.

இந்த விவகாரம் வெளியுலகிற்கு தெரியவந்து, 4 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதுகுறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் என்று சிபிஎம் வேட்பாளர் வெங்கடேசன் வழக்கு தொடர்ந்தார்.

ஆட்சியரை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆட்சியர் மற்றும் உதவியாளர் மாற்றம் செய்ய உத்தரவிட்டது. அதன்படி, மதுரை மக்களவை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக எஸ்.நாகராஜன், உதவி அலுவலர் சாந்தகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த மதுரை மாநகர குற்ற உதவி ஆணையர் மோகன்தாஸ் மற்றும் மதுரை ஆயுதப்படை சார்பு ஆய்வாளர் கண்ணனை பணியிட மாற்றம் செய்து டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முறையாக பாதுகாப்பு பணியில் ஈடுபடவில்லை என்று மோகன்தாஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் மதுரை ஆயுதப்படை சார்பு ஆய்வாளர் கண்ணன், ராமநாதபுரத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அடுத்த செய்தி