ஆப்நகரம்

அத்தை-மருமகன் கூட்டணி, அண்ணன்-தங்கை கூட்டணி; பப்பு எங்ககிட்ட வேகாது - யோகி

’இந்த அத்தை-மருமகன் கூட்டணி, அண்ணன்-தங்கை கூட்டணி இதெல்லாம் உ.பி.,யில் வெற்றி பெறாது. அவர்களது உண்மை நிறத்தை மக்கள் அறிவர். கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் போட்டியிடுவதன் மூலமாக அமேதி தொகுதியை இழிவு படுத்துகிறார்’ என்றார் யோகி.

Samayam Tamil 1 Apr 2019, 8:38 pm
’இந்த அத்தை-மருமகன் கூட்டணி, அண்ணன்-தங்கை கூட்டணி இதெல்லாம் உ.பி.,யில் வெற்றி பெறாது. அவர்களது உண்மை நிறத்தை மக்கள் அறிவர். கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் போட்டியிடுவதன் மூலமாக அமேதி தொகுதியை இழிவு படுத்துகிறார்’ என்றார் யோகி.
Samayam Tamil yogi-adityanath


காங்கிரஸ், தன்னுடைய வெற்றியைவிட பாஜகவின் வெற்றியைத் தடுப்பதே பிரதான நோக்கம் எனும் வியூகத்துக்கு நகர்ந்திருக்கிறது. மதச்சார்பின்மைச் சக்திகள் ஒன்றிணைய வேண்டும் எனும் குரல்கள் ஒலிக்கின்றன. பிரதான எதிர்க்கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியைவிடவும் ஆளும்கட்சியான சமாஜ்வாதி கட்சியே கூட்டணிக்கு உகந்தது என்று நினைக்கிறார் ராகுல்.

2012 சட்டமன்றத் தேர்தல், 2014 மக்களவைத் தேர்தல் தோல்விகளுக்குப் பின் கடந்த ஆண்டில் மீண்டெழத் தொடங்கியது பகுஜன் சமாஜ் கட்சி. மாட்டுக்கறி அரசியல், ரோஹித் வெமூலா விவகாரம், உனாவில் இறந்த பசுமாட்டின் தோலை உரித்ததாகக் குற்றம்சாட்டி தலித் இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவம் என்று தலித்துகள் எழுச்சிக்கு வித்திட்ட அத்தனை நிகழ்வுகளும் உத்தரப் பிரதேசத்தில் இவற்றுக்கெல்லாம் கடும் எதிர்வினையாற்றிய மாயாவதியின் செல்வாக்கை மீண்டும் உயர்த்தின.

மாயாவதி- அகிலேஷ் யாதவ் கூட்டணியை பாஜக கடுமையாக விமர்சித்து பிரசாரம் செய்து வருகிறது. இந்நிலையில், மாயாவதி- அகிலேஷ் யாதவ் கூட்டணி, ராகுல் காந்தி பிரசார கூட்டத்தில் பிரியங்கா காந்தி கலந்துகொண்டது ஆகியவை குறித்த கேள்விகள் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர் ’இந்த அத்தை-மருமகன் கூட்டணி, அண்ணன்-தங்கை கூட்டணி இதெல்லாம் உ.பி.,யில் வெற்றி பெறாது. அவர்களது உண்மை நிறத்தை மக்கள் அறிவர். கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் போட்டியிடுவதன் மூலமாக அமேதி தொகுதியை இழிவு படுத்துகிறார் என்றார்.

அடுத்த செய்தி