ஆப்நகரம்

பிரச்சாரத்தில் அதிர்ச்சி; சக்தி வாய்ந்த குண்டுவெடித்து பாஜக எம்.எல்.ஏ உட்பட 5 பேர் பலி!

மாவோயிஸ்ட்கள் நடத்திய குண்டுவெடிப்பு சம்பவத்தில் பாஜக எம்.எல்.ஏ உட்பட 5 பேர் பலியான சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 9 Apr 2019, 7:22 pm
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. வரும் 11ஆம் தேதி தொடங்கி மே 19ஆம் தேதி வரை தேர்தல் நடக்கிறது. 20 மாநிலங்களின் 91 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ளது.
Samayam Tamil Chhattisgarh Blast


இதற்கன தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை உடன் நிறைவு பெற்றது. சட்டீஸ்கர் மாநிலத்தின் 11 மக்களவை தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதற்காக அம்மாநிலத்தின் தண்டவத்தா பகுதியில் பாஜகவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது மாவோயிஸ்ட்கள் நடத்திய சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில், பாஜக எம்.எல்.ஏ பீமா மண்டோவி உட்பட 5 பேர் பலியாகினர். இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதில் வாகனங்கள் நாலாபுறமும் சேதமடைந்து கிடக்கின்றன.

பாதுகாப்பிற்கு சென்ற பலரும் காயமடைந்து, அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் விரைந்துள்ளனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தண்டவத்தா தொகுதியில் போட்டியிட்டு பீமா மண்டோவி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. கடந்த 2013ஆம் ஆண்டு சுக்மா மாவட்டம் தர்பா பள்ளத்தாக்கு பகுதியில் மாவோயிஸ்ட் நடத்திய தாக்குதலில் காங்கிரஸ் தலைவர் நந்த்குமார் படேல் உட்பட 27 பேர் கொல்லப்பட்டனர்.

அடுத்த செய்தி