ஆப்நகரம்

தோல்வியை மறைமுகமாக பயந்து ஒப்புக் கொண்ட பாஜக - கி.வீரமணி!

அமமுகவிற்கு தூது அனுப்பிய விவகாரத்தில், பாஜக தனது தோல்வியை ஒப்புக் கொண்டு விட்டதாக திராவிடக் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 12 Apr 2019, 10:58 pm
தஞ்சை மக்களவை திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்தை ஆதரித்து, திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி பிரச்சாரம் மேற்கொண்டார்.
Samayam Tamil K-Veeramani


ஊரணிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புராண காலத்திலிருந்தே தூதுவிட்டு தான் பாஜகவிற்கு பழக்கம். அதனால் தூதுவிட்டு இருப்பார்கள். இதைதான் தினகரன் தெளிவாக சொல்கிறார்.

தோல்வியை மறைமுகமாக பயந்து அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளார்கள் என்பது இதற்குப் பொருள். தமிழ்நாட்டை, தமிழர்களின் உள்ளங்களை, தமிழர்களின் எண்ணங்கள் தான் ஆளவேண்டும் வேண்டும்.

தவிர, டெல்லியில் இருந்து ஒற்றையாட்சி ஆளக்கூடாது. வெற்றி வாய்ப்பு தமிழகத்தில் பிரகாசமாக உள்ளது. இது கருத்துக் கணிப்பு அல்ல, மக்கள் கணிப்பு.

தமிழகத்தில் மட்டுமல்ல வட இந்தியாவிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. வருகிற மே 23 தெளிவான மாற்றத்தை ஏற்படுத்தும். அதேபோல் மத்தியில் மோடி ஆட்சி இருக்காது.

அதற்கு விடை கொடுத்து அனுப்பும் சூழல் அமைந்துவிட்டது. அதேபோல் தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைவது உறுதி.

ஸ்டாலினை முதல்வராக ஏற்றுக் கொள்ள கூட்டணி கட்சி தலைவர்களை விட மக்கள், வியாபாரிகள், மாணவர்கள், விவசாயிகள் என பலரும் தயார் ஆகிவிட்டனர் என்று கி.வீரமணி தெரிவித்தார்.

அடுத்த செய்தி