ஆப்நகரம்

சும்மா கலாய்க்கிறாங்க யுவர் ஆனர்; தேர்தல் ஆணையத்திடம் இவர் மீது புகார் அளித்த பாஜக!

தமிழ் டுவிட்டர் பயனாளர் ஒருவருக்கு எதிராக, தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் அளித்துள்ளது.

Samayam Tamil 9 Apr 2019, 10:35 pm
தேர்தல் ஆணையத்திடம் டுவிட்டர் பயனாளர் ராஜகுமாரி என்ற முன்னாள் ஊடகவியலாளர் சோனியா அருண்குமார் மீது தமிழக பாஜக புகார் அளித்துள்ளது. அவரை சமூக விரோத சக்தி என்று பாஜக தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.
Samayam Tamil BJP Manifesto


இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பாஜகவின் தேர்தல் அறிக்கைகளை கிண்டலடிக்கும் வகையில் போலியான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இதுகுறித்து தொடர்ச்சியாக 10 டுவிட்களை நேற்று பகிர்ந்துள்ளார்.

இதன் முதல் டுவிட்டர் பதிவில், “கத்தியை எடுத்தவனுக்கு, கத்தியால் தான் சாவு” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பதிவுகளில், புனிதத்தைக் கடைபிடிக்க கோவில் தெருக்களில் தலித்களை அனுமதிக்க மாட்டோம், வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூ.10,000, 8ஆம் வகுப்பு மாணவர்கள் வீர் சவார்க்கரின் இந்துத்துவா கொள்கைகளை கற்க வேண்டும், பிராமணர்களுக்கு 98.6% இடஒதுக்கீடு, மாநில அரசுகளுக்கு ஆலோசனை வழங்க சாமியார்கள் நியமிக்கப்படுவர் என்பன உள்ளிட்ட விஷயங்கள் இடம்பெற்றுள்ளன.

இதுகுறித்து சோனியா கூறுகையில், இந்த மீம்ஸ்களை நான் உருவாக்கவில்லை. வாட்ஸ்-அப்பில் வந்தவற்றை பகிர்ந்துள்ளேன். இதனை பலரும் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.

என்னை மட்டும் ஏன் சிக்க வைக்கின்றனர். மேலும் சமூக வலைத்தளம் எங்களுக்கு அரசியல் விமர்சனங்களை முன்வைக்க கருத்துரிமையை வழங்கி உள்ளது எனக் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி