ஆப்நகரம்

தாமரை லட்டுகேக் வெட்டி வெற்றியை கொண்டாடவுள்ள பாஜக

தேர்தல் முடிவிற்கு பிறகு பாஜகவின் மைய அலுவலகத்தில் இன்று மாலை வெற்றி கொண்டாட்டம் துவங்க திட்டமிட்டுள்ளனர். பிஸ்தா பாதாம் கலந்த 50 கிலோ எடை கொண்ட தாமரை பர்பி ரூ. 2000த்துக்கு விற்கபடுகிறது. பாஜகவின் இமாலய வெற்றியை கொண்டாட தில்லி செய்தித் தொடர்பாளர் பிரவீன் ஷங்கர் கபூர் இந்த பர்பி செய்ய உத்தரவிட்டார்.

Samayam Tamil 23 May 2019, 2:50 pm
பாஜக 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. கடந்த மக்களவைத் தேர்தல் போலவே இந்த தேர்தலிலும் பாஜக சாதனை படைத்துள்ளது. இதனையடுத்து இந்தியா முழுக்க உள்ள பாஜக தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து இதனை கொண்டாடி வருகின்றனர்.
Samayam Tamil D7LHXX6VUAE4zBi


தேர்தல் முடிவிற்கு பிறகு பாஜகவின் மைய அலுவலகத்தில் இன்று மாலை வெற்றி கொண்டாட்டம் துவங்க திட்டமிட்டுள்ளனர்.

இன்று மதியம் மஹாராஷ்டிராவின் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் பாஜகவின் தலைமை செயலகத்தில் தங்கள் வெற்றியை கொண்டாட 125 கிலோ கேக் மற்றும் 2000 கிலோ லட்டுகளை தயார் நிலையில் வைத்துள்ளார். இந்த கொண்டாட்டத்தில் கட்சி தலைவர் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிஸ்தா பாதாம் கலந்த 50 கிலோ எடை கொண்ட தாமரை பர்பி ரூ. 2000த்துக்கு விற்கபடுகிறது. பாஜகவின் இமாலய வெற்றியை கொண்டாட தில்லி செய்தித் தொடர்பாளர் பிரவீன் ஷங்கர் கபூர் இந்த பர்பி செய்ய உத்தரவிட்டார்.

தில்லி பாஜக அலுவலகத்தில் 7 கிலோ எடை கொண்ட பிரத்யேக லட்டுகேக்கை பெங்காலி பாஸ்ட்ரி ஷாப்ப் தயாரித்துள்ளது. இதுபோல 9 லட்டு கேக்குகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த கேக்குகள் கட்சியின் மத்திய அலுவலகத்தில் பாஜக பிரமுகர்களால் வெட்டப்படவுள்ளன.

அடுத்த செய்தி