ஆப்நகரம்

டிடிவியின் கட்சியே சுயேட்சை கட்சி! குக்கர் சின்னம் கொடுக்க முடியாது! தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

பதிவு செய்யப்படாத அமமுகவுக்கு பொதுச்சின்னம் கொடுக்க முடியாது. தனித்தனி சின்னம்தான் ஒதுக்க முடியும் எனவும் கூறப்பட்டிருக்கிறது. இந்நிலையில் டிடிவி தினகரன் எந்தச் சின்னம் கிடைத்தாலும் ஓகே என கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Samayam Tamil 25 Mar 2019, 8:36 pm
டிடிவி தினகரன் தொங்கிய அமமுக பதிவு செய்யப்படாத கட்சி என்பதால் குக்கர் சின்னம் தர முடியாது என தலைமை தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
Samayam Tamil 070158_tt


மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழக இடைத்தேர்தலுக்கு குக்கர் சின்னத்தை பொது சின்னமாக ஒதுக்கக்கோரிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு அந்தச் சின்னத்தை வழங்க தலைமைத் தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.

இதைனையடுத்து அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, "அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இதுவரை பதிவு செய்யப்படாத கட்சி. எனவே, அந்தக் கட்சியின் வேட்பாளர்களை சுயேச்சையாகவே கருதுகிறோம்." என தலைமை தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.

பதிவு செய்யப்படாத அமமுகவுக்கு பொதுச்சின்னம் கொடுக்க முடியாது. தனித்தனி சின்னம்தான் ஒதுக்க முடியும் எனவும் கூறப்பட்டிருக்கிறது. இந்நிலையில் டிடிவி தினகரன் எந்தச் சின்னம் கிடைத்தாலும் ஓகே என கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி