ஆப்நகரம்

ஜனநாயக விதிமுறை மீறிய திமுக உறுப்பினர்மீது வழக்குப்பதிவு

அரசு ஊழியரின் தபால் வாக்கு யாருக்கு வாக்களித்தோம் என்பதை முகநூலில் வெளியிட்ட திமுக பிரமுகர் மணிகண்டன்மீது பொள்ளாச்சி நகர கிழக்கு காவல் நிலைய போலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Samayam Tamil 13 Apr 2019, 3:08 pm
தபால் ஓட்டுகள் தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள், காவலர்கள் ஆகியவர்கள் வாக்களிக்க உதவுபவை. பொதுமக்கள் வாக்குப்பதிவுக்குப் பின்னர், இது அவர்களுக்கென தனியாக நடத்தப்படும். இந்த வாக்குகள் தனியாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். தபால் வாக்கு செலுத்துபவர் அதற்காக பதிவு செய்திருக்க வேண்டும்.
Samayam Tamil 6f3e580a-6ebf-448e-aade-5c04736964c4


இந்த விவரங்கள் பத்திரமாக பாதுகாக்கப்பட வேண்டும். இது வெளியிடப்பட்டால் அவர் மீது வழக்கு பதியப்படும். முக்கியமாக பொது வெளியான சமூக வலைதளங்களில் இவற்றை வெளியிட கட்டாயத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியரின் தபால் வாக்கு யாருக்கு வாக்களித்தோம் என்பதை முகநூலில் வெளியிட்ட திமுக பிரமுகர் மணிகண்டன்மீது பொள்ளாச்சி நகர கிழக்கு காவல் நிலைய போலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தேர்தல் விதிமுறைகளை மீறியும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை ரகசியம் காக்க வேண்டும் என்ற ஜனநாயக விதிமுறை இய மீறியதாக வழக்கப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி