ஆப்நகரம்

மதுரையில் மக்களவைத் தேர்தலை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

மதுரையில் மக்களவைத் தேர்தலை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது, அது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 10 Apr 2019, 7:37 pm
தமிழகத்தில் வரும் 18ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மதுரையில் மக்களவைத் தேர்தலை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு முறையிடப்பட்டுள்ளது.
Samayam Tamil மதுரையில் தேர்தல் ரத்து செய்யக்கோரி மனு
மதுரையில் தேர்தல் ரத்து செய்யக்கோரி மனு


நாடு முழுவதும் முதற்கட்டமாக மக்களவைத் தேர்தல் நாளை தொடங்குகிறது. தமிழகத்திற்கான மக்களவைத் தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெறுகிறது. அன்றே காலியாகவுள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.

இந்நிலையில் கே.கே. ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், மதுரையில் மக்களவைத் தேர்தலை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மனுவில் வாக்காளர்களுக்கு அதிகளவில் சில கட்சிகள் பணம் தருவதாகவும், பறக்கும் படை அதிகாரிகளுக்கு புகாரளித்தும் அதற்குரிய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என தெரிவித்தார்.

இதை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, வரும் நாட்களில் விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் என தெரிகிறது.

அடுத்த செய்தி