ஆப்நகரம்

கள்ளவாக்கு செலுத்த ஆதரிப்பதுபோல பேசிய அன்புமணிமீது வழக்கு பதிவிட உத்தரவு

தேர்தல் பரப்புரையின்போது சர்ச்சையாக பேசிய புகாரில் அன்புமணி ராமதாஸ் மீது வழக்குப்பதிவு செய்ய திருப்போரூர் தேர்தல் அலுவலருக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு இடப்பட்டுள்ளது.

Samayam Tamil 6 Apr 2019, 1:36 pm
தேர்தல் பரப்புரையின்போது சர்ச்சையாக பேசிய புகாரில் அன்புமணி ராமதாஸ் மீது வழக்குப்பதிவு செய்ய திருப்போரூர் தேர்தல் அலுவலருக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு இடப்பட்டுள்ளது.
Samayam Tamil anbumani RAMADOSS


முன்னதாக அன்புமணி ராமதாஸ் காஞ்சிபுரம் பிரசார கூட்டத்தில் பேசும்போது, ‘தேர்தல் பூத்-ல் நாம்தான் இருப்போம், புரிந்துகொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன், நாம் தான் இருப்போம்....’ என கூறியானர். இதனை புரிந்துகொண்ட அவரது கட்சி ஆதரவாளர்கள் ஆரவாரம் செய்தனர். கள்ள வாக்கு செலுத்துவதை ஊக்குவிப்பது போல அன்புமணி பேசுகிறார் எஅன் திமுக தரப்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து தற்போது தேர்தல் பரப்புரையின்போது சர்ச்சையாக பேசிய புகாரில் அன்புமணி ராமதாஸ் மீது வழக்குப்பதிவு செய்ய திருப்போரூர் தேர்தல் அலுவலருக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு இடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி