ஆப்நகரம்

யார் வேணா நிக்கட்டும்; எனக்கு இவர் தான் சரியான போட்டி - நடிகை ரோஜா அதிரடி!

தன்னை எதிர்த்து யார் நின்றாலும், நான் இவரைத் தான் போட்டியாக நினைக்கிறேன் என்று நடிகை ரோஜா தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 24 Mar 2019, 1:05 pm
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடத்தப்படுகிறது. வரும் 11ஆம் தேதி ஆந்திர மாநிலத்தின் 25 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. அதேநாளில் 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட உள்ளது.
Samayam Tamil MLA Roja


ஆந்திர மாநிலம் நகரி சட்டமன்ற தொகுதியில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் நடிகை ரோஜா போட்டியிடுகிறார். இவர் தற்போது எம்.எல்.ஏவாக ரோஜா இருக்கிறார். தனது தொண்டர்களுடன் சென்று, வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசுகையில், என்னை எதிர்த்து யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். ஆனால் நான் போட்டியாக கருதுவது சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் லோகேஷ் ஆகியோர் மட்டுமே.

கடந்த 10 ஆண்டுகளாக தெலுங்குதேசம் கட்சிக்காக உழைத்தேன். சந்திரபாபு நாயுடுவை ஒரு சகோதரனாக நினைத்திருந்தேன். எனக்கு நகரி, சந்திரகிரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்தார். ஆனால் தன்னுடைய கட்சிக்காரர்களை கொண்டே என்னை தோற்கடித்தார்.

நான் எந்தவித தவறும் செய்யவில்லை. இருப்பினும் ஓராண்டு சட்டமன்றத்தில் இருந்து இடைநீக்கம் செய்தார்கள். அதனால் என்னுடைய அரசியல் பயணத்தை ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டேன். ஜெகன்மோகன் ரெட்டியை முதலமைச்சராக உழைப்பேன். அதை மக்களும் முடிவு செய்துவிட்டனர் என்று தெரிவித்தார்.

அடுத்த செய்தி