ஆப்நகரம்

திருநாவுக்கரசரை தரக்குறைவாக விமர்சித்த சென்னைப் பெண் கைது

திருநாவுக்கரசர் குறித்து பொது மேடையில் தரக்குறைவாக விமர்சித்த சென்னைப் பெண்ணை காவல்துறை அதிகாரிகள் கைது செய்து அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Samayam Tamil 11 Apr 2019, 10:34 pm
திருச்சி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திருநாவுக்கரசரை தரக்குறைவாக விமர்சித்த சென்னையை சேர்ந்த பெண்ணை ஸ்ரீரங்கம் நகர காவல்துறையினர் கைது செய்தனர்.
Samayam Tamil திருநாவுக்கரசரை விமர்சித்த சென்னைப் பெண் கைது
திருநாவுக்கரசரை விமர்சித்த சென்னைப் பெண் கைது


ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த நர்மதா நந்தக்குமார் என்ற பெண், திருச்சி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் திருநாவுக்கரசர் தேர்தலில் தோல்வியுற்றால், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வரும் ஒவ்வொரு பக்தர்களின் காலணிகளை துடைத்து சுத்தம் செய்வதாக தெரிவித்தார்.

பெண்ணின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் கட்சி உறுப்பினர் எம். சரவணன் அவர் மீது ஸ்ரீரங்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரை ஏற்றுக் கொண்ட காவல்துறையினர் நபரை தரக்குறைவாக விமர்சித்தல் மற்றும் குற்ற எண்ணங்களுடன் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளில் நர்மதாவி மீது வழக்குப் பதிவு செய்தனர்.

முன்னதாக அப்பெண் பாஜக-வை சேர்ந்தவர் என பலரும் கருதி வந்த நிலையில், அந்த செய்தியை திருச்சி மாவட்ட பாஜக-வினர் மறுத்துள்ளனர். மேலும் அவருக்கும் பாஜக கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி