ஆப்நகரம்

கொல்லைபுறம் வழியாக திமுக தலைவர் ஆனவர் ஸ்டாலின்: முதல்வர் சாடல்

ஸ்டாலின் தனது தந்தையை பயன்படுத்தி தி.முகவின் தலைவர் ஆனவர் என்றும், ஆனால் தான் படிபடியாக உயர்ந்து முதல்வர் பதவிக்கு வந்ததாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 27 Mar 2019, 12:01 pm
தென் சென்னை மக்களவையின் அதிமுக தொகுதி வேட்பாளர் ஜெயவர்தனை ஆதரித்து கந்தன்சாவடியில் முதல்வர் ஏடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
Samayam Tamil சென்னையில் ஸ்டாலினை சாடி முதல்வர் பழனிசாமி பரப்புரை
சென்னையில் ஸ்டாலினை சாடி முதல்வர் பழனிசாமி பரப்புரை


அப்போது பேசிய அவர், காவிரி பிரச்சனைக்காக அதிமுக எம்.பி-க்கள் நாடளுமன்றத்தை முடக்கினார்கள் என்றும் அதிமுக எம்.பிக்கள் என்றும்

ஆனால் திமுக எம்.பிக்கள் எதற்கும் குரல் எழுப்பியதில்லை. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட தி.முக எந்த முயற்சியிம் எடுக்கவில்லை.

எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போதே சிலைக்கடத்தலை தடுக்க தனிபிரிவை அமைத்துவிட்டார். இது தொரியாமல் ஸ்டாலின் தனிபிரிவை உருவாக்க வேண்டும் என்று கூறுவது நகைப்பாக உள்ளது.

பரோட்டா கடைக்கு சென்று சாப்பிட்டு விட்டு பணம் தரமல் ஊழியர்களை அடிப்பது அழகுநிலையம் சென்று பெண்னை தாக்குவதும் இது தான் தி.முகவின் வேலை. அவர்கள் ஆட்சிக்கு வந்தால் அராஜகம் அதிகரிக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரபரப்புரையில் பேசினார்.

அடுத்த செய்தி