ஆப்நகரம்

நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பிரசாரம் செய்யும் முதல்வா் பழனிசாமி

வடசென்னைப் பகுதியில் இன்று தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வா் பழனிசாமி நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய மைக்கை பயன்படுத்தியது மக்கள் கவனத்தை ஈா்த்துள்ளது.

Samayam Tamil 25 Mar 2019, 9:28 pm
வடசென்னைப் பகுதியில் இன்று தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வா் பழனிசாமி நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய மைக்கை பயன்படுத்தியது மக்கள் கவனத்தை ஈா்த்துள்ளது.
Samayam Tamil Palaniswami 1.


மக்களவைத் தோ்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் தோ்தல் பிரசாரமும் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக வேட்பாளா் ஆா்.மோகனராஜ்க்கு ஆதரவாக முதல்வா் பழனிசாமி இன்று வடசென்னை பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

அப்போது முதல்வா் பழனிசாமி, கன் மைக்கை தவிா்த்து முதல் முதலாக காா்ட்லஸ் கை்கை பயன்படுத்தி பிரசாரம் மேற்கொண்டாா். இது அனைவரின் கவனத்தையும் ஈா்த்தது. அப்போது அவா் பேசுகையில், மருத்துவத்துறையில் தமிழகம் பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது.


நாடு பாதுகாப்பாக இருக்க மோடி மீண்டும் மத்தியில் ஆட்சி பொறுப்பேற்க வேண்டும். தகுதி வாய்ந்த பிரதமா் நமது நரேந்திர மோடி. நம் நாட்டின் வளா்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் அண்டை நாடுகள் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்து சதி செயல்களை செய்வதை பாா்த்திருக்கிறோம். அப்படிப்பட்ட தீவிரவாதிகள் வேரோடு கூண்டோடு அழிக்கக் கூடிய சக்தி பிரதமா் நரேந்திர மோடிக்குத் தான் உள்ளது.

நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்பதற்காகவே இத்தோ்தலில் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. திமுக, காங்கிரஸ் கூட்டணி 15 ஆண்டுகளில் என்ன சாதனை செய்தது? பிரதமா் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் ஏழை மக்களுக்கு 16 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்று உறுதிமொழி அளித்தாா்.

அடுத்த செய்தி