ஆப்நகரம்

தேனியில் பரபரப்பு - ராகுல் காந்தியின் பிரச்சார மேடை சரிந்தது!

மக்களவை தேர்தலை ஒட்டி ராகுல் காந்தியின் பிரச்சாரத்திற்காக போடப்பட்டிருந்த மேடை சரிந்து விழுந்ததால் பதற்றம் நிலவியது.

Samayam Tamil 11 Apr 2019, 11:52 pm
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தல் இன்று நடந்து முடிந்துள்ளது. தொடர்ந்து வரும் மே 19ஆம் தேதி வரை தேர்தல் நடக்கிறது.
Samayam Tamil Theni Rahul Gandhi


தமிழகத்தில் வரும் 18ஆம் தேதி, 39 மக்களவை தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 23ஆம் தேதி நடக்கிறது.

இந்நிலையில் நாளை(ஏப்ரல் 12) தேனியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இதற்காக தேனி - அன்னஞ்சி சாலையில் பிரம்மாண்ட பிரச்சார மேடை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் எதிர்பாராதவிதமான பிரச்சார மேடை சரிந்து விழுந்தது. இதனை சரிசெய்யும் பணியில் தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில் யாருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.

தேனி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி