ஆப்நகரம்

O Panneerselvam: வசமாக சிக்கிக் கொண்ட ஓபிஎஸ் மகன்; இப்படி பண்ணா மத்திய அமைச்சர் ஆயிடலாமா!

ஓபிஎஸ் மகன் ரவீந்திநாத் குமார் அழைப்பிதழ் ஒன்றில் மத்திய அமைச்சர் எனக் குறிப்பிடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 28 May 2019, 10:57 am
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி படுதோல்வி அடைந்தது. இருப்பினும் தேனி மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் மட்டும் வெற்றி பெற்றார்.
Samayam Tamil OPS Son


சமீபத்தில் நடைபெற்ற பாஜக கூட்டணி கட்சி எம்.பிக்கள் கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், மகன் ரவீந்திரநாத் குமார் ஆகியோர் பங்கேற்றனர். எப்படியும் மகனுக்கு அமைச்சர் பதவி வாங்கியே ஆக வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் முயற்சித்து வருகிறார்.

மூத்த தலைவர்கள் உடன் ஓபிஎஸ் குடுமிபிடி சண்டை; மத்திய அமைச்சர் பதவிக்கு அடிதடி!

ஆனால் கூட்டணி கட்சி எம்.பிக்கள் கூட்டத்தில் பேசிய மோடி, அமைச்சர் பதவி கிடைக்கும் என்று அதிகாரமற்ற செய்திகளை நம்பாதீர்கள் என்று புதிய எம்.பிக்களுக்கு மோடி அறிவுரை வழங்கினார். இதனால் ஓபிஎஸ் சற்று கலக்கத்தில் இருக்கிறார்.

ஏற்கனவே கோவில் கல்வெட்டு ஒன்றில் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பே, எம்பி என்று குறிப்பிட்டிருந்தனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, கல்வெட்டு மறைக்கப்பட்டது.

இந்நிலையில் அழைப்பிதழ் ஒன்றில், ரவீந்திரநாத் குமார் மத்திய அமைச்சர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது மற்றொரு சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. இதனை பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

அடுத்த செய்தி