ஆப்நகரம்

விஜயகாந்த் மிஸ்ஸிங்... பிரேமலதா, சுதீஷுடன் இருக்கும் இவர் யார் தெரியுமா..??

பிரேமலதா மற்றும் சுதீஷ் ஆகியோர் பரப்புரைக்கு செல்லும் போது புதிய முகமாக கவனமீர்த்து வருகிறார், பூர்ண ஜோதி. இவர் யார் என்ன என்பது குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.

Samayam Tamil 6 Apr 2019, 7:48 pm
தேமுதிக தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் புதிய முகமாக வலம் வரும் ஒருவர் தமிழக அரசியல் களத்தில் கவனமீர்த்துள்ளார். விரைவில் அவர் கட்சியில் தலைமை பொறுப்புக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Samayam Tamil தேமுதிக பரப்புரை களத்தில் கவனமீர்க்கும் புதிய முகம்
தேமுதிக பரப்புரை களத்தில் கவனமீர்க்கும் புதிய முகம்


அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக-வுக்கு மக்களவை தேர்தலில் 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் மட்டுமில்லாமல் கூட்டணி கட்சிகளான அதிமுக, பாமக மற்றும் பாஜக போட்டியிடும் தொகுதிகளிலும் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் சுதீஷ் இருவரும் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரசார கூட்டத்தில் பிரேமலதா பேச்சுக்கள் சர்ச்சையை கிளப்பினாலும், அடுத்தநாள் நாளிதழ்களில் அந்த செய்தி பிரதானமாக இடம்பெற்றுவிடும். இதனால் தொடர்ந்து பிரேமலதா மற்றும் சுதீஷின் பரப்புரை மக்களால் கவனிக்கப்பட்டு வருகிறது.

இதுவரை பிரேமலதா பரப்புரை கூட்டங்களுக்கு செல்லும் போது அவருடைய தம்பி சுதீஷ் மற்றும் அவரது மனைவி உடன் செல்கின்றனர். இதனால் பிரேமலதாவுக்கு இணையாக சுதீஷின் மனைவி பூர்ண ஜோதியும் தமிழக அரசியல் களத்தில் கவனமீர்த்து அருகிறது.

விரைவில் அதிமுக-வில் ஜெயலலிதா மற்றும் சசிகலா இருந்தது போல இவர்கள் இருவரும் உருவாகலாம் என்கின்றன அரசியல் வட்டாரங்கள். மேலும் பூர்ண ஜோதிக்கும் கட்சியில் செல்வாக்கு கூடியிருப்பதாக சொல்லப்படுகிறது.

ஏற்கனவே தேமுதிக-வில் ஒரே விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ், விஜய பிரபாகரன் என ஒரே குடும்பத்தினரின் ஆதிக்கம் இருந்து வருகிறது. மேலும், அந்த கட்சியில் குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் விரைவில் பூர்ண ஜோதிக்கும் கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என தேமுதிக வட்டாரங்கள் தகவல் கூறுகின்றன.

அடுத்த செய்தி