ஆப்நகரம்

அவர் ரொம்ப பாவம் - பிரச்சாரத்தில் விஜயகாந்த் பற்றி உருக்கமாக பேசிய உதயநிதி!

மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவான பிரச்சாரத்தின் போது, விஜயகாந்த் குறித்து உருக்கமாக உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

Samayam Tamil 24 Mar 2019, 2:48 pm
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடத்தப்படுகிறது. வரும் ஏப்ரல் 18ஆம் தேதி, தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகளுக்கும், புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் தேர்தல் நடைபெறுகிறது.
Samayam Tamil Udhayanidhi Stalin


இதையொட்டி பல்வேறு கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. கள்ளக்குறிச்சி மக்களவை தேர்தலில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி போட்டியிடுகிறார்.

அவருக்கு ஆதரவாக உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் கஜா உள்ளிட்ட பல்வேறு புயல்கள் தாக்கியுள்ளன. ஆனால் அதற்கு உரிய நிவாரணத்தை மத்திய அரசு வழங்கவில்லை.

ஒருமுறை கூட தமிழகம் வராத பிரதமர் மோடி, 5 ஆண்டுகளில் 52 நாடுகளுக்குச் சென்றுள்ளார். இதற்கான செலவு மட்டும் ரூ.2,500 கோடி. குஜராத்தில் படேல் சிலையை ரூ.3,000 கோடியில் அமைத்துள்ளனர்.

இதனால் மக்களுக்கு என்ன பயன்? விஜயகாந்த் மிகவும் நல்லவர். அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளார். அவரை நாம் விமர்சிக்க வேண்டாம். விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது என்பது கூட, விஜயகாந்திற்கு தெரியுமா என்று தெரியவில்லை என்று கூறினார்.

அடுத்த செய்தி