ஆப்நகரம்

தேர்தல் பிரச்சாரத்தில் குதித்த விஜயகாந்த் - சென்னையில் தேமுதிகவினர் உற்சாகம்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மத்திய சென்னை மக்களவை தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

Samayam Tamil 15 Apr 2019, 7:25 pm
தமிழகத்தில் வரும் 18ஆம் தேதி மக்களவை மற்றும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி பல்வேறு கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிகவிற்கு கள்ளக்குறிச்சி, திருச்சி, விருதுநகர், வடசென்னை ஆகிய 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
Samayam Tamil Vijayakanth


இவர்களை ஆதரித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா பிரச்சாரம் செய்து வருகிறார். உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த், ஓய்வு எடுத்து வந்தார். மருத்துவர்களிடம் உரிய ஆலோசனை பெற்று, விரைவில் விஜயகாந்த் பிரச்சாரம் செய்வார் என்றும் பிரேமலதா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பிரச்சாரம் முடிவுக்கு வரவுள்ள நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் இன்று சென்னையில் தேமுதிக மற்றும் கூட்டணி கட்சிகளை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

முன்னதாக வடசென்னை தொகுதி தேமுதிக வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து, பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். விஜயகாந்த் வருகையால், தேமுதிகவினர் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர். ஏற்கனவே விஜயகாந்த் வீடியோ மூலம் பொதுமக்களிடம் வாக்கு கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி