ஆப்நகரம்

தருமபுரியில் 10 வாக்குச்சாவடிகளில் மோசடியா? குவியும் புகார்கள் - உண்மை நிலவரம் என்ன!

நேற்று நடைபெற்ற மக்களவை தேர்தலின் போது, தருமபுரியில் சில வாக்குச்சாவடிகள் கைப்பற்றப்பட்டு மோசடி நடந்ததாக புகார்கள் எழுந்துள்ளன.

Samayam Tamil 19 Apr 2019, 8:55 pm
தமிழகத்தில் நேற்று 38 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இந்த சூழலில் மாலை 3 மணிக்கு மேல் வாக்குச்சாவடிகளை ஆளுங்கட்சியினர் கைப்பற்ற முயற்சி செய்துள்ளதாக திமுக புகார் தெரிவித்தது.
Samayam Tamil Dharmapuri Fraud


இந்த சூழலில் தருமபுரி மக்களவை தொகுதி பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நத்தமேடு கிராமத்தில் வாக்குப்பதிவில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதாவது, வாக்களிக்க வந்தவருக்கு கையில் மையை மட்டும் வைத்துவிட்டு, வாக்கை குறிப்பிட்ட கட்சியினர் செய்துவிட்டதாக கூறப்பட்டது. அப்போது சிசிடிவி கேமரா திருப்பி வைக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியை தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி பலமுறை ஆய்வு செய்தார். ஆனால் அதையும் மீறி முறைகேடு நடந்துள்ளதாக திமுக கூறி வருகிறது.

எனவே அங்கு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து ஆய்வு செய்வதாக ஆட்சியர் மலர்விழி தெரிவித்தார். தருமபுரி வாக்குச்சாவடி முறைகேடு தொடர்பாக ஏராளமான புகார்கள் எங்களுக்கும் வந்துள்ளது என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி